தைவானின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தயார்!
Jun 14, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தைவானின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தயார்!

முதல்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 29, 2023, 02:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவுக்கு பதிலடி கொடுக்க தைவானும் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதல் முறையாக உள்நாட்டிலேயே நீர்மூழ்கி போர்க்கப்பலை தயாரித்திருக்கிறது.

சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. எனினும், தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், அந்நாட்டை எப்படியாவது மீண்டும் தங்களுடன் இணைத்துவிட வேண்டும் என்று சீனா துடித்து வருகிறது. இதற்காக, தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், சீனா இராஜதந்திர ரீதியாகவும் தைவானை தனிப்படுத்தி இருக்கிறது. அதேசமயம், சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறியிருக்கிறது. எனவே, தைவான் நாட்டின் தற்காப்புக்கான செலவை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தற்பாதுகாப்புக்காக 2024-ம் ஆண்டுக்கான நிதியாக 19 பில்லியன் டாலரை ஒதுக்கி இருக்கிறது.

இந்தத் தொகை, தனது நெருங்கிய பங்காளியான அமெரிக்காவிடம் இருந்து இராணுவக் கருவிகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது. அதேசமயம், நீர்மூழ்கிக் கப்பலை பெறுவதில் தைவானுக்கு சில இடையூறுகள் இருந்தன. எனவே, சொந்த நாட்டிலேயே நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்க முடிவு செய்தது.

இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு 8 நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்றை தொடங்கியது. இத்திட்டத்தின்படி, முதன் முறையாக “ஹாய் குன்” என்கிற நீர்மூழ்கி போர்க்கப்பலை தயாரித்திருக்கிறது. இக்கப்பலின் அறிமுக விழா காஹ்சியுங் நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் சாய் இங்வென் கலந்துகொண்டு பேசுகையில், “தைவான் வரலாற்றில் இது முக்கியமான நாளாகும். முன்பெல்லாம் உள்ளூரில் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இயலாது என்று கூறப்பட்டது. இன்றோ அனைவரும் வியக்கும் வகையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை நாமே வடிவமைத்தது மட்டுமின்றி, தயாரித்தும் இருக்கிறோம். நாம் சாதித்துவிட்டோம்” என்று கூறினார்.

இந்த நீர்மூழ்கி போர்க்கப்பலானது 229.6 அடி நீளம், 26.2 அடி அகலம் மற்றும் 59 அடி உயரம் கொண்டது. இது 3,000 டன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம். ஒரு சில சோதனைகளுக்கு பிறகு இக்கப்பல் அடுத்தாண்டு கடற்படையில் இணைக்கப்படும் என்று தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Tags: taiwansubmarine
ShareTweetSendShare
Previous Post

திடக்கழிவுகளை நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பயன்படுத்த நடவடிக்கை – நிதின் கட்கரி!

Next Post

பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் – நடந்தது என்ன?

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies