வாச்சாத்தி வழக்கு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு - முழு விவரம்!
Sep 9, 2025, 09:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாச்சாத்தி வழக்கு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு – முழு விவரம்!

Web Desk by Web Desk
Sep 29, 2023, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெ.தாதம்பட்டி அருகே உள்ளது வாச்சாத்தி கிராம‌ம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சந்தன வீரப்பனுக்கு ஆதரவாக, மரங்களை வெட்டிக் கடத்துவதாகத் தமிழக வனத்துறையினர் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில், 1992 -ம் ஆண்டு ஜூன் 20 -ம் தேதி அந்த கிராமத்தையும் சுற்றி வளைத்து காவல்துறை, வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பல மணி நேரம் சோதனை நடத்தி 133 பேரை கைது செய்தனர். இதில், 90 பேர் பெண்கள், 28 பேர் குழந்தைகள், 15 பேர் ஆண்கள்.

இந்நிலையில், கூட்டுக்குழுவில் இடம் பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது. மேலும், கிராம மக்களை அடித்து உதைத்தும், குடிசைகளைத் தகர்த்தும், வீட்டிலிருந்த பொருட்களை நாசம் செய்தனர் என குற்றம் சாட்டப்பட்டது.

தமிழகக் காவல்துறை இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில், 4 ஐஎப்எஸ் அதிகாரிகள், வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய்த் துறையினர் என 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2011-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, 54 பேர் மரணம் அடைந்த நிலையில், மற்ற 215 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இதில், 126 வனத்துறையினர், 84 காவல்துறையினர், 5 வருவாய்த் துறையினர், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 12 வனத்துறையினருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை அல்லது சுய தொழிலுக்கு உதவ வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், அன்றைய தருமபுரி ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வன அதிகாரி உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், குற்றவாளிகளின் மேல் முறையீடு மனுவையும் தள்ளுபடி செய்தார்.

Tags: chennai high court
ShareTweetSendShare
Previous Post

பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் – நடந்தது என்ன?

Next Post

ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மூடுவது குறித்து இந்தியா ஆய்வு!

Related News

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies