வாச்சாத்தி வழக்கு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு - முழு விவரம்!
Jan 14, 2026, 06:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாச்சாத்தி வழக்கு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு – முழு விவரம்!

Murugesan M by Murugesan M
Sep 29, 2023, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெ.தாதம்பட்டி அருகே உள்ளது வாச்சாத்தி கிராம‌ம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சந்தன வீரப்பனுக்கு ஆதரவாக, மரங்களை வெட்டிக் கடத்துவதாகத் தமிழக வனத்துறையினர் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில், 1992 -ம் ஆண்டு ஜூன் 20 -ம் தேதி அந்த கிராமத்தையும் சுற்றி வளைத்து காவல்துறை, வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பல மணி நேரம் சோதனை நடத்தி 133 பேரை கைது செய்தனர். இதில், 90 பேர் பெண்கள், 28 பேர் குழந்தைகள், 15 பேர் ஆண்கள்.

இந்நிலையில், கூட்டுக்குழுவில் இடம் பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது. மேலும், கிராம மக்களை அடித்து உதைத்தும், குடிசைகளைத் தகர்த்தும், வீட்டிலிருந்த பொருட்களை நாசம் செய்தனர் என குற்றம் சாட்டப்பட்டது.

தமிழகக் காவல்துறை இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில், 4 ஐஎப்எஸ் அதிகாரிகள், வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய்த் துறையினர் என 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2011-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, 54 பேர் மரணம் அடைந்த நிலையில், மற்ற 215 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இதில், 126 வனத்துறையினர், 84 காவல்துறையினர், 5 வருவாய்த் துறையினர், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 12 வனத்துறையினருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை அல்லது சுய தொழிலுக்கு உதவ வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், அன்றைய தருமபுரி ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வன அதிகாரி உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், குற்றவாளிகளின் மேல் முறையீடு மனுவையும் தள்ளுபடி செய்தார்.

Tags: chennai high court
ShareTweetSendShare
Previous Post

பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் – நடந்தது என்ன?

Next Post

ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மூடுவது குறித்து இந்தியா ஆய்வு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies