வாச்சாத்தி வழக்கு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு - முழு விவரம்!
Sep 12, 2026, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாச்சாத்தி வழக்கு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு – முழு விவரம்!

Murugesan M by Murugesan M
Sep 29, 2023, 02:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெ.தாதம்பட்டி அருகே உள்ளது வாச்சாத்தி கிராம‌ம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சந்தன வீரப்பனுக்கு ஆதரவாக, மரங்களை வெட்டிக் கடத்துவதாகத் தமிழக வனத்துறையினர் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில், 1992 -ம் ஆண்டு ஜூன் 20 -ம் தேதி அந்த கிராமத்தையும் சுற்றி வளைத்து காவல்துறை, வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பல மணி நேரம் சோதனை நடத்தி 133 பேரை கைது செய்தனர். இதில், 90 பேர் பெண்கள், 28 பேர் குழந்தைகள், 15 பேர் ஆண்கள்.

இந்நிலையில், கூட்டுக்குழுவில் இடம் பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது. மேலும், கிராம மக்களை அடித்து உதைத்தும், குடிசைகளைத் தகர்த்தும், வீட்டிலிருந்த பொருட்களை நாசம் செய்தனர் என குற்றம் சாட்டப்பட்டது.

தமிழகக் காவல்துறை இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில், 4 ஐஎப்எஸ் அதிகாரிகள், வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய்த் துறையினர் என 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2011-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, 54 பேர் மரணம் அடைந்த நிலையில், மற்ற 215 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இதில், 126 வனத்துறையினர், 84 காவல்துறையினர், 5 வருவாய்த் துறையினர், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 12 வனத்துறையினருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை அல்லது சுய தொழிலுக்கு உதவ வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், அன்றைய தருமபுரி ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வன அதிகாரி உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், குற்றவாளிகளின் மேல் முறையீடு மனுவையும் தள்ளுபடி செய்தார்.

Tags: chennai high court
Share
Tweet
SendShare
Previous Post

பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் – நடந்தது என்ன?

Next Post

ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மூடுவது குறித்து இந்தியா ஆய்வு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies