சமூகத்தின் சக்தி மிகப்பெரியது: பிரதமர் மோடி!
Jan 14, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூகத்தின் சக்தி மிகப்பெரியது: பிரதமர் மோடி!

சங்கல்ப் சப்தா தனித்துவமான வாரம் திட்டத்தை தொடங்கி வைத்தார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் சங்கல்ப் சப்தா திட்டத்தின் தனித்துவமான வாரத்தைத் தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அரசே அனைத்தையும் செய்யும் என்று எண்ணக்கூடாது. சமுதாயத்தின் சக்தி மிகப் பெரியது என்று கூறியிருக்கிறார்.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை ஒன்றிய அளவில் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் நோக்கில், ஆர்வத்தில் உறுதி (சங்கல்ப் சப்தா) என்கிற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இத்திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 7-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில், நாடு முழுவதிலும் உள்ள 329 மாவட்டங்களில் இருந்தும் 500 ஒன்றியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், இத்திட்டத்தை சிறப்பு கவனத்துடன் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக, வரும் அக்டோபர் 3-ம் தேதியில் இருந்து 9-ம் தேதி வரை தனித்துவமான வராமாக அறிவித்திருக்கிறது. இத்திட்டத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட மேம்பாட்டு கருப்பொருளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, முதல் 6 நாட்கள்  ‘சம்பூர்ண ஸ்வஸ்த்யா’, ‘சுபோஷித் பரிவார்’, ‘ஸ்வச்தா’, ‘கிரிஷி’, ‘ஷிக்ஷா’ மற்றும் ‘சம்ரிதி திவாஸ்’ ஆகிய கருப்பொருள்களில் நடக்கிறது. நிறைவு நாளான அக்டோபர் 9-ம் தேதி ‘ சங்கல்ப் சப்தாஹ்-சமவேஷ் சமரோஹ்’ என்று கருப்பொருளில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து 3,000 மக்கள் பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பங்கேற்கிறார்கள்.

மேலும், இத்திட்டத்தில் தொகுதி மற்றும் பஞ்சாயத்து அளவிலான செயல்பாட்டாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 2 லட்சம் பேர் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தனித்துவமான வாரத் திட்டத்தை டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஏற்கெனவே, 112 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிகளின் மூலம் 25 கோடி மக்கள் பயனடைந்தார்கள். இதன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ஒன்றிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுவும் வெற்றிகரமாக நடைபெறும் என்று நம்புகிறேன். இது ஒருங்கிணைந்த இந்தியாவின் வெற்றி. இந்தியாவின் எதிர்காலத்திற்கு இத்திட்டம் மிகவும் முக்கியம்.

மாவட்ட அளவில் திட்டங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும்போது, ஒட்டுமொத்த மாவட்டமும் பயன்பெறுவதில்லை. அதிக எண்ணிக்கையில் மக்கள் பலனடைந்திருக்கலாம். ஆனால், ஒன்றிய அளவில் நடைபெறும் பணிகள் கீழ்மட்டம் வரை சென்று தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, கீழ்மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட இத்திட்டம் மிகவும் முக்கியம்.

2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும். வளர்ந்த இந்தியா என்பது மாநகரங்களின் வளர்ச்சியோடு நின்றுவிடக்கூடாது. வளர்ச்சியில் இருந்து நமது கிராமங்கள் விடுபட்டு விடக்கூடாது. 140 கோடி மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய மாற்றமே நமக்குத் தேவை. ஒன்றிய அளவில் பணிகளை சிறப்பாக மேற்கொள்பவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும். இதனை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய குழுக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசே அனைத்தையும் செய்யும் என்ற எண்ணத்தில் இருந்து நாம் வெளிவர வேண்டும். சமூகத்தின் சக்தி மிகப் பெரியது. ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் நாம் விரைவாக வெற்றியை எதிர்பார்க்கலாம் என்பது எனது அனுபவம். இதன் காரணமாகவே, சுற்றுச்சூழல் சார்ந்த முன்னெடுப்புகளும், தூய்மை இந்தியா முன்னெடுப்புகளும் வெற்றி பெற்றன. மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பணம் ஒதுக்குவது அவசியம் அல்ல. நாம் நமது வளத்தை சிறப்பாக பயன்படுத்தியே சிறப்பான முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். நல்ல அரசு நிர்வாகம் என்பது இலக்குகளை அடைவதில்தான் இருக்கிறது” என்றார்.

Tags: sankalp saptaahweek longPM ModiLaunches
ShareTweetSendShare
Previous Post

இரயில் நிலையங்களை மறு சீரமைப்பது அரசின் முன்னுரிமை நடவடிக்கை :  பிரதமர் மோடி!

Next Post

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ஆளுநர் அஞ்சலி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies