80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அர்மேனியாவில் தஞ்சம்!
Jul 26, 2025, 10:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அர்மேனியாவில் தஞ்சம்!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகோா்னோ-கராபாக் பிராந்தியத்தை, அஜா்பைஜான் மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வசித்து வந்த 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.

சோவியத் யூனியனின் ஒருங்கிணைந்த பகுதிகள், 1991-ல் பல்வேறு நாடுகளாக உடைந்தன. இதில், அஜர்பைஜான், அர்மேனியா ஆகிய நாடுகளும் அடங்கும்.

அர்மேனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையில் அமைந்துள்ள, நகோா்னோ-கராபாக் பிராந்தியம் தொடா்பாக, இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.

அர்மேனியப் பழங்குடியினர் அதிகளவில் உள்ள நகோா்னோ-கராபாக் பிராந்தியத்தை அஜர்பைஜானின் ஒருங்கிணைந்த பகுதியாக சர்வதேச நாடுகள் அங்கீகரித்தன.

இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு, அர்மேனியப் படையினரின் ஆதரவுடன், அந்தப் பகுதியைப் பிரிவினைவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதைத்தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்தில் அர்மேனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி நகோா்னோ-கராபாக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி அஜா்பைஜான் அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலைச் சமாளிக்க முடியாத பிரிவினைவாதிகள், அஜர்பைஜான் இராணுவத்திடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து, நகோா்னோ-கராபாக் பிராந்தியம் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அஜா்பைஜான் அறிவித்தது.

நகோா்னா-கராபாக் குடியரசை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி கலைக்க அதன் அதிபா் சாம்வெல் ஷாராமான்யன் அரசாணைப் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், நகோா்னா-கராபாக் பிராந்தியத்தில் வசித்து வந்த அர்மேரியர்கள், அஜா்பைஜான் அரசால் துன்புறுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அந்த பிராந்தியத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதுவரை, 84 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள், அர்மேனியா நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Tags: Asylum in Armenia
ShareTweetSendShare
Previous Post

உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திடீர் மாற்றம்!

Next Post

சாதனை படைத்த கிரணுக்கு பிரதமர் வாழ்த்து !

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies