80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அர்மேனியாவில் தஞ்சம்!
Jul 29, 2026, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அர்மேனியாவில் தஞ்சம்!

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகோா்னோ-கராபாக் பிராந்தியத்தை, அஜா்பைஜான் மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வசித்து வந்த 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.

சோவியத் யூனியனின் ஒருங்கிணைந்த பகுதிகள், 1991-ல் பல்வேறு நாடுகளாக உடைந்தன. இதில், அஜர்பைஜான், அர்மேனியா ஆகிய நாடுகளும் அடங்கும்.

அர்மேனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையில் அமைந்துள்ள, நகோா்னோ-கராபாக் பிராந்தியம் தொடா்பாக, இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.

அர்மேனியப் பழங்குடியினர் அதிகளவில் உள்ள நகோா்னோ-கராபாக் பிராந்தியத்தை அஜர்பைஜானின் ஒருங்கிணைந்த பகுதியாக சர்வதேச நாடுகள் அங்கீகரித்தன.

இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு, அர்மேனியப் படையினரின் ஆதரவுடன், அந்தப் பகுதியைப் பிரிவினைவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதைத்தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்தில் அர்மேனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி நகோா்னோ-கராபாக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி அஜா்பைஜான் அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலைச் சமாளிக்க முடியாத பிரிவினைவாதிகள், அஜர்பைஜான் இராணுவத்திடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து, நகோா்னோ-கராபாக் பிராந்தியம் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அஜா்பைஜான் அறிவித்தது.

நகோா்னா-கராபாக் குடியரசை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி கலைக்க அதன் அதிபா் சாம்வெல் ஷாராமான்யன் அரசாணைப் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், நகோா்னா-கராபாக் பிராந்தியத்தில் வசித்து வந்த அர்மேரியர்கள், அஜா்பைஜான் அரசால் துன்புறுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அந்த பிராந்தியத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதுவரை, 84 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள், அர்மேனியா நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Tags: Asylum in Armenia
ShareTweetSendShare
Previous Post

உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திடீர் மாற்றம்!

Next Post

சாதனை படைத்த கிரணுக்கு பிரதமர் வாழ்த்து !

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies