காங்கிரஸ் கட்சியின் அராஜகத்தை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்!
Oct 25, 2025, 08:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் அராஜகத்தை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல்!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 07:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். காங்கிரஸ்கட்சியின் அராஜகங்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆகவே, இத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்புடன் பா.ஜ.க. தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதை முன்னிட்டு, மாநிலத்தில் பரிவர்தன் யாத்திரைகள் தொடங்கப்பட்டன.

முதல் யாத்திரை சத்தீஸ்கரின் தெற்குப் பகுதியில் உள்ள தண்டேவாடாவில் இருந்து செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கியது. 2-வது யாத்திரை செப்டம்பர் 15-ம் தேதி வடக்கில் ஜஷ்பூரில் இருந்து தொடங்கியது. முதல் பரிவர்தன் யாத்திரை தண்டேவாடாவிலிருந்து பிலாஸ்பூர் வரை 16 நாட்களில் 1,728 கி.மீ. தூரம் பயணித்தது. இந்த யாத்திரையின்போது 45-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள், 32 வரவேற்புக் கூட்டங்கள் மற்றும் சாலைப் பேரணி ஆகியவை நடைபெற்றன.

2-வது யாத்திரை 12 நாட்களில் 1,261 கி.மீ. தூரத்தை கடந்து, 2 கோட்டங்களில் 14 மாவட்டங்களில் உள்ள 39 சட்டமன்றத் தொகுதிகளில் வலம் வந்தது. இந்த யாத்திரையின்போது 39-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களும், 53 வரவேற்பு கூட்டங்களும் நடைபெற்றன. இந்த யாத்திரை நிறைவடைந்ததைத் தொடர்ந்து பிலாஸ்பூரில் பரிவர்தன் மகா சங்கல்ப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்களை எதிர்த்து நிற்க மக்கள் உறுதி செய்து விட்டார்கள். மாற்றத்திற்கு வாக்களிக்கத் தயாராகி விட்டார்கள். மக்கள் மத்தியில் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்கிற விருப்பம் வெளிப்படுகிறது. காங்கிரஸ் அரசு தங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை சத்தீஸ்கர் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

நீங்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால், உங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம் என்பது எனது உத்தரவாதம். சத்தீஸ்கரில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான் உங்கள் கனவுகள் நனவாகும். மத்திய அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி, இங்குள்ள காங்கிரஸ் அரசு அனைத்து முயற்சிகளையும் சிதைக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்றிருக்கிறது. சாலை, ரயில், மின்சாரம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களாக இருக்கட்டும், நிதி வழங்குவதில் நாங்கள் மாநிலத்தை விட்டுக் கொடுக்கவில்லை. பொது வாழ்க்கையில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன.

மத்திய அரசு மாநிலத்திற்கு எந்த அநீதியும் இழைக்காது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. எனினும், இத்திட்டங்கள் தாமதமாகி விட்டன அல்லது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டன” என்றார்.

முன்னதாக, பிலாஸ்பூர் வந்த பிரதமர் மோடி ரோடு ஷோவின்போது, பாரம்பரிய உடையணிந்த பெண்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கான்வாய் பயணித்த சாலையின் இருபுறமும் வரிசையாக நின்ற உள்ளூர்வாசிகளின் பிரதமர் மோடிக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியது.

Tags: PM ModiSpeechCHATTISGARH
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா !

Next Post

பிரதமர் மோடியின் சாதனை: அமித்ஷா பெருமிதம்!

Related News

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies