காங்கிரஸ் கட்சியின் அராஜகத்தை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்!
Jan 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் அராஜகத்தை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 07:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். காங்கிரஸ்கட்சியின் அராஜகங்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆகவே, இத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்புடன் பா.ஜ.க. தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதை முன்னிட்டு, மாநிலத்தில் பரிவர்தன் யாத்திரைகள் தொடங்கப்பட்டன.

முதல் யாத்திரை சத்தீஸ்கரின் தெற்குப் பகுதியில் உள்ள தண்டேவாடாவில் இருந்து செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கியது. 2-வது யாத்திரை செப்டம்பர் 15-ம் தேதி வடக்கில் ஜஷ்பூரில் இருந்து தொடங்கியது. முதல் பரிவர்தன் யாத்திரை தண்டேவாடாவிலிருந்து பிலாஸ்பூர் வரை 16 நாட்களில் 1,728 கி.மீ. தூரம் பயணித்தது. இந்த யாத்திரையின்போது 45-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள், 32 வரவேற்புக் கூட்டங்கள் மற்றும் சாலைப் பேரணி ஆகியவை நடைபெற்றன.

2-வது யாத்திரை 12 நாட்களில் 1,261 கி.மீ. தூரத்தை கடந்து, 2 கோட்டங்களில் 14 மாவட்டங்களில் உள்ள 39 சட்டமன்றத் தொகுதிகளில் வலம் வந்தது. இந்த யாத்திரையின்போது 39-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களும், 53 வரவேற்பு கூட்டங்களும் நடைபெற்றன. இந்த யாத்திரை நிறைவடைந்ததைத் தொடர்ந்து பிலாஸ்பூரில் பரிவர்தன் மகா சங்கல்ப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்களை எதிர்த்து நிற்க மக்கள் உறுதி செய்து விட்டார்கள். மாற்றத்திற்கு வாக்களிக்கத் தயாராகி விட்டார்கள். மக்கள் மத்தியில் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்கிற விருப்பம் வெளிப்படுகிறது. காங்கிரஸ் அரசு தங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை சத்தீஸ்கர் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

நீங்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால், உங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம் என்பது எனது உத்தரவாதம். சத்தீஸ்கரில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான் உங்கள் கனவுகள் நனவாகும். மத்திய அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி, இங்குள்ள காங்கிரஸ் அரசு அனைத்து முயற்சிகளையும் சிதைக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்றிருக்கிறது. சாலை, ரயில், மின்சாரம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களாக இருக்கட்டும், நிதி வழங்குவதில் நாங்கள் மாநிலத்தை விட்டுக் கொடுக்கவில்லை. பொது வாழ்க்கையில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன.

மத்திய அரசு மாநிலத்திற்கு எந்த அநீதியும் இழைக்காது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. எனினும், இத்திட்டங்கள் தாமதமாகி விட்டன அல்லது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டன” என்றார்.

முன்னதாக, பிலாஸ்பூர் வந்த பிரதமர் மோடி ரோடு ஷோவின்போது, பாரம்பரிய உடையணிந்த பெண்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கான்வாய் பயணித்த சாலையின் இருபுறமும் வரிசையாக நின்ற உள்ளூர்வாசிகளின் பிரதமர் மோடிக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியது.

Tags: PM ModiSpeechCHATTISGARH
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா !

Next Post

பிரதமர் மோடியின் சாதனை: அமித்ஷா பெருமிதம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies