ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!
Nov 18, 2025, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, 21 ஏரிகள் நிரம்பியுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடையிடையே பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஏரிகள் நிரம்பி வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 201 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல், குன்றத்தூரில் 166 மில்லி மீட்டர் மழையும், ஸ்ரீபெரும்புதூரில் 179 மில்லி மீட்டர் மழையும், செம்பரம்பாக்கத்தில் 112 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த பகுதிகளில் சராசரியாக இதுவரை 164 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தற்போது வரை மாவட்டத்தின் சராசரி மழை அளவு 614 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

இதனால், செய்யாற்றின் குறுக்கே உள்ள அனுமன்தண்டலம், மாகறல் மற்றும் பாலாற்றில் பழைய சீவரம் தடுப்பணைகள் நிரம்பி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டப் பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 361 ஏரிகளில் 21 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும், 22 ஏரிகள் 75 சதவீதத்தையும், 69 ஏரிகள் 50 சதவீதத்தையும் எட்டியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 14 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும், 50 ஏரிகள் 75 சதவீதத்தையும், 102 ஏரிகள் 50 சதவீதத்தையும் எட்டியிருப்பதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. ஏரிகள் நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: dam
ShareTweetSendShare
Previous Post

ஸ்குவாஷில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து !

Next Post

கீழடி: 9-ஆம் கட்ட அகழாய்வு பணி இன்றுடன் நிறைவு!

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies