குன்னூரில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி இறந்தவர்களுக்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்து, மருத்துவமனையில்…
— K.Annamalai (@annamalai_k) September 30, 2023
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக
சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.