தூய்மை இந்தியா திட்டம்: ஜெ.பி.நட்டா, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் பங்கேற்பு!
Jan 14, 2026, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூய்மை இந்தியா திட்டம்: ஜெ.பி.நட்டா, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் பங்கேற்பு!

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பா.ஜ.க. தலைவர்களும் பங்கேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 1, 2023, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்றனர்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 1-ம் தேதி மாபெரும் தூய்மை இயக்கம் நடைபெறுகிறது. ஸ்வச் பாரத் என்பது தனிப்பட்ட பொறுப்பு அல்ல, அனைவரும் இணைந்து செயல்படுத்துவதாகும். தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க நீங்களும் இந்த முயற்சியில் சேருங்கள். நீங்கள் வசிக்கும் தெரு, சுற்றுப்புறம் அல்லது உங்கள் பகுதியிலுள்ள பூங்கா, ஏரி அல்லது பொது இடங்களை தூய்மைப்படுத்துங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த அழைப்பை ஏற்று நாடு முழுவதும் இன்று தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், தேசியத் தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி உள்ளிட்ட பலரும் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். அதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தெருக்களை சுத்தம் செய்தனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சீதாபூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பீகார் மாநிலம் பாட்னாவிலுள்ள காளிகட்டில் அம்மாநில பா.ஜ.க. தலைவரும், அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் டெல்லி ஐ.டி.ஓ. சத்காட்டிலும், உ.பி.யில் பா.ஜ.க. தலைவர் பூபேந்திர சிங் சௌத்ரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் நாடு முழுவதும் நடந்த தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்றனர்.

தூய்மைப் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு நாடு முழுவதும் உள்ள மக்களை அறிவுறுத்திய பிரதமர் மோடி, இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வது மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதற்கான மாபெரும் நடவடிக்கையாக இருக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags: Cm Yogi Adityanathswatch bharathJ.P.NaddaAmit sha
ShareTweetSendShare
Previous Post

குன்னூர் விபத்து – அண்ணாமலை இரங்கல்!

Next Post

ஒரு நாள் உலகக் கோப்பை வெற்றிப் பெற்ற அணிகள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies