வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை காங்கிரஸுக்கு இல்லை!
Sep 10, 2025, 06:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை காங்கிரஸுக்கு இல்லை!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 1, 2023, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. ஆனால், பா.ஜ.க. மாநிலத்தில் செழிப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையடுத்து, ஆளும் பா.ஜ.க.வும், எதிர்கட்சியான காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க. தலைமையிலான மத்தியப் பிரதேச அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். ஊழல் பெருகி விட்டதாகவும், அதிக அளவிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

இதையடுத்து, ராகுலுக்கு பதிலளிளித்து முதல்வர் சௌகான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ராகுல் மத்திய பிரதேசத்துக்கு வந்து நிறையப் பேசினார். ஆனால், அவர் பொய்களை மட்டுமே பேசினார். ராகுலின் பொய்யான வாக்குறுதிகளுக்கு யாரும் பலியாகப் போவதில்லை. மக்களுக்கு எல்லாம் தெரியும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராகுலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சிவராஜ் சிங் சௌகான், “இந்தூரில் பா.ஜ.க. அரசு செய்த வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் ஆட்சியில் செய்ததா என்று மாநில மக்களிடம் கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியிடம் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்கு பணம் இல்லை. ஆனால், இன்று வளர்ச்சிப் பணிகளுக்கு பணப் பற்றாக்குறையே இல்லை” என்று கூறினார்.

முன்னதாக, இந்தூரில் முதல்கட்ட மெட்ரோ இரயில் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் சௌகான், தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று எனது மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது இந்தூர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. இந்தூரில் வசிப்பவர்களுக்கு மெட்ரோ ஒரு ஆரம்பம்தான். ஒன்றாக இணைந்து இந்தூரை உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றுவோம். இப்போது இந்தூரின் வளர்ச்சி வேகம் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கு பா.ஜ.க. வேட்பாளர்களை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: SpeechMadya PradeshCM Sivaraj Singh Chouhan
ShareTweetSendShare
Previous Post

இந்தியத் தூதரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: போரிஸ் ஜான்சன் ஆலோசகர்!

Next Post

திமுகவிற்குப் பயம் வந்துவிட்டது- அண்ணாமலை!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies