வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை காங்கிரஸுக்கு இல்லை!
Jan 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை காங்கிரஸுக்கு இல்லை!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 1, 2023, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. ஆனால், பா.ஜ.க. மாநிலத்தில் செழிப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையடுத்து, ஆளும் பா.ஜ.க.வும், எதிர்கட்சியான காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க. தலைமையிலான மத்தியப் பிரதேச அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். ஊழல் பெருகி விட்டதாகவும், அதிக அளவிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

இதையடுத்து, ராகுலுக்கு பதிலளிளித்து முதல்வர் சௌகான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ராகுல் மத்திய பிரதேசத்துக்கு வந்து நிறையப் பேசினார். ஆனால், அவர் பொய்களை மட்டுமே பேசினார். ராகுலின் பொய்யான வாக்குறுதிகளுக்கு யாரும் பலியாகப் போவதில்லை. மக்களுக்கு எல்லாம் தெரியும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராகுலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சிவராஜ் சிங் சௌகான், “இந்தூரில் பா.ஜ.க. அரசு செய்த வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் ஆட்சியில் செய்ததா என்று மாநில மக்களிடம் கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியிடம் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்கு பணம் இல்லை. ஆனால், இன்று வளர்ச்சிப் பணிகளுக்கு பணப் பற்றாக்குறையே இல்லை” என்று கூறினார்.

முன்னதாக, இந்தூரில் முதல்கட்ட மெட்ரோ இரயில் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் சௌகான், தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று எனது மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது இந்தூர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. இந்தூரில் வசிப்பவர்களுக்கு மெட்ரோ ஒரு ஆரம்பம்தான். ஒன்றாக இணைந்து இந்தூரை உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றுவோம். இப்போது இந்தூரின் வளர்ச்சி வேகம் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கு பா.ஜ.க. வேட்பாளர்களை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: SpeechMadya PradeshCM Sivaraj Singh Chouhan
ShareTweetSendShare
Previous Post

இந்தியத் தூதரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: போரிஸ் ஜான்சன் ஆலோசகர்!

Next Post

திமுகவிற்குப் பயம் வந்துவிட்டது- அண்ணாமலை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies