தெலங்கானாவில் ரூ.13,500 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!
Mar 15, 2026, 07:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானாவில் ரூ.13,500 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!

விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான மஞ்சள் வாரியம் அமைக்கவும் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 1, 2023, 06:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் சாலை, இரயில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உயர்கல்வி போன்ற முக்கியமான துறைகளில் 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், மஞ்சள் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் , தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதாகவும் அறிவித்தார்.

மகபூப்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனாவுக்குப் பிறகு, மஞ்சள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து, உலகளாவிய தேவையும் அதிகரித்திருக்கிறது. ஆகவே, தொழில்ரீதியாக அதிக கவனம் செலுத்துவதும், உற்பத்தி முதல் ஏற்றுமதி வரை மஞ்சளின் மதிப்புச் சங்கிலியில் முன்முயற்சி எடுப்பதும் முக்கியமாகும். மஞ்சள் விவசாயிகளின் அவசியத்தையும், முக்கிய உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளர்களின் எதிர்கால வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு, தேசிய மஞ்சள் வாரியத்தை நிறுவ மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது” என்றார்.

தெலுங்கானா விவசாயிகள் மஞ்சளை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றனர். நிஜாமாபாத், நிர்மல் மற்றும் ஜக்தியால் மாவட்டங்கள் மஞ்சள் சாகுபடிக்கு பெயர் பெற்றவை. இங்கிருந்து விரலி மற்றும் குமிழ் வகை மஞ்சள் உள்நாட்டு வணிகத் தேவைகளுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மஞ்சள் தவிர, தேநீர், காபி, மசாலா, சணல், தேங்காய் உள்ளிட்டவைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் போது, ​​கிருஷ்ணா நிலையத்தில் இருந்து ஹைதராபாத் (கச்சிகுடா) – ராய்ச்சூர் – ஹைதராபாத் (கச்சேகுடா) ரயில் சேவையை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவையானது, தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத், ரங்காரெட்டி, மகபூப்நகர், நாராயண்பேட்டை ஆகிய மாவட்டங்களை கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்துடன் இணைக்கும். இச்சேவையானது, பின்தங்கிய மாவட்டங்களான மகபூப்நகர் மற்றும் நாராயண்பேட்டையில் உள்ள பல பகுதிகளுக்கு முதல் முறையாக இரயில் இணைப்பை வழங்கும். இது மாணவர்கள், தினசரி பயணிகள், தொழிலாளர்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் கைத்தறித் தொழிலுக்கும் பயனளிக்கும்.

அதேபோல, நாக்பூர் – விஜயவாடா பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக உள்ள முக்கியச் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இத்திட்டங்களில் 108 கி.மீ. நீளமுள்ள ‘நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை வாரங்கலில் இருந்து கம்மம் வரை NH-163G பிரிவு’ மற்றும் 90 கி.மீ. நீளமுள்ள ‘NH-163G இன் கம்மம் முதல் விஜயவாடா வரையிலான நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை ஆகியவை அடங்கும். இச்சாலைத் திட்டங்கள் மொத்தம் 6,400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும். இத்திட்டங்களால் வாரங்கலுக்கும், கம்மத்துக்கும் இடையிலான பயண தூரம் சுமார் 14 கி.மீ. மற்றும் கம்மம் மற்றும் விஜயவாடா இடையேயான தூரம் சுமார் 27 கி.மீ. குறையும்.

மேலும், இந்நிகழ்ச்சியின்போது தேசிய நெடுஞ்சாலை-365BB-ன் சூர்யாபேட்டை முதல் கம்மம் வரையிலான 59 கி.மீ. நீளமுள்ள நான்கு வழிச்சாலை திட்டமும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சுமார் 2,460 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இத்திட்டம், ஹைதராபாத் – விசாகப்பட்டினம் வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். மேலும், பாரத்மாலா பரியோஜனாவின் கீழ் உருவாக்கப்பட்டது. இது கம்மம் மாவட்டம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளுக்கும் சிறந்த இணைப்பை வழங்கும். இது தவிர, ​’ஜக்லேயர் – கிருஷ்ணா புதிய இரயில் பாதையின் 37 கி.மீ. தொலைவை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட புதிய ரயில் பாதைப் பகுதி, பின்தங்கிய மாவட்டமான நாராயண்பேட்டையின் பகுதிகளை முதல் முறையாக இரயில்வே வரைபடத்தில் கொண்டு வருகிறது.

அதோடு, முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.சுமார் 2,170 கோடி ரூபாய் செலவிலான ஹாசன்-செர்லப்பள்ளி எல்.பி.ஜி. குழாய் திட்டம், கர்நாடகாவின் ஹாசனில் இருந்து செர்லப்பள்ளி (ஹைதராபாத் புறநகர்) வரை பாதுகாப்பான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் எல்.பி.ஜி. விநியோகத்தை வழங்குகிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (பிபிசிஎல்) கிருஷ்ணாப்பட்டினத்திலிருந்து ஹைதராபாத் (மல்காபூர்) வரையிலான மல்டி-ப்ராடக்ட் பெட்ரோலியக் குழாய்க்கான திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்தில் 1,940 கோடி ரூபாய் செலவில் 425 கி.மீ.க்கு குழாய் அமைக்கப்படும். இப்பகுதியில் பாதுகாப்பான, வேகமான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பெட்ரோலியப் பொருட்களை குழாய்வழி வழங்கும்.

அதேபோல, ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் 5 புதிய கட்டடங்களையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதாவது, ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்; கணிதம் மற்றும் புள்ளியியல் பள்ளி; ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்; விரிவுரை மண்டப வளாகம் – III; மற்றும் சரோஜினி நாயுடு ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் (இணைப்பு). ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மேம்பட்ட வசதிகள் மற்றும் வசதிகளை வழங்குவதற்கான ஒரு திட்டமாகும்.

Tags: PM ModiTelangana
ShareTweetSendShare
Previous Post

தாங்கிரி தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை!

Next Post

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies