300 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல் கண்டுப்பிடிப்பு
Nov 12, 2025, 04:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

300 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல் கண்டுப்பிடிப்பு

Web Desk by Web Desk
Oct 2, 2023, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் அதப்படக்கி கண்மாய் மையப்பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல் கண்டெடுக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் காரைக்குடி வரலாற்றுத்துறை விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அதப்படக்கி கண்மாயின் மையப்பகுதியில் 3 அடி உயரத்தில் திருவாழிக்கல் என்ற தானக்கல் இருப்பதை கண்டறிந்தனர்.

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கூறியதாவது, முற்காலங்களில் மன்னர்கள் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட நிலங்களைக் கோவில் அல்லது தனி நபர்களுக்கு தானம் வழங்குவதை ஒரு மரபாகக் கொண்டிருந்தனர்.

அவ்வாறு வழங்கும் போது சைவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களைத் தேவதானம் என்றும், வைணவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களைத் திருவாழிக்கல் திருவிடையாட்டம் என்றும் அழைப்பர்.

சைவ கோயில்களுக்கு வழங்கப்படும் நில தான கல்லில் சூலம் அடையாளமாக இருக்கும். வைணவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களில் சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்ட அடையாளம் காணப்படும். அதப்படக்கியில் கிடைத்த 3 அடி உயரமுள்ள இந்த தானக்கல்லில் பூ போட்ட சக்கரம் மற்றும் சங்கு போன்ற அடையாளங்கள் கோட்டோவியமாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

திருவாழிக்கல் தானக்கல் வைணவ கோயில்களுக்கு நிலம் தானமாக வழங்கியதற்கு அடையாளம். தொன்மை வாய்ந்த இத்தகைய வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாப்பதில் தொல்லியல் துறையினர் கவனம் செலுத்த வேண்டும், என்று கூறினார்.

Tags: sivagangai
ShareTweetSendShare
Previous Post

ஐ.என்.எஸ். தலைவராக ராகேஷ் சர்மா தேர்வு

Next Post

கடற்படை துணை தளபதியாக தருண் சோப்தி பதவியேற்பு

Related News

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies