300 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல் கண்டுப்பிடிப்பு
Sep 26, 2025, 09:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

300 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல் கண்டுப்பிடிப்பு

Web Desk by Web Desk
Oct 2, 2023, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் அதப்படக்கி கண்மாய் மையப்பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல் கண்டெடுக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் காரைக்குடி வரலாற்றுத்துறை விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அதப்படக்கி கண்மாயின் மையப்பகுதியில் 3 அடி உயரத்தில் திருவாழிக்கல் என்ற தானக்கல் இருப்பதை கண்டறிந்தனர்.

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கூறியதாவது, முற்காலங்களில் மன்னர்கள் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட நிலங்களைக் கோவில் அல்லது தனி நபர்களுக்கு தானம் வழங்குவதை ஒரு மரபாகக் கொண்டிருந்தனர்.

அவ்வாறு வழங்கும் போது சைவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களைத் தேவதானம் என்றும், வைணவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களைத் திருவாழிக்கல் திருவிடையாட்டம் என்றும் அழைப்பர்.

சைவ கோயில்களுக்கு வழங்கப்படும் நில தான கல்லில் சூலம் அடையாளமாக இருக்கும். வைணவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களில் சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்ட அடையாளம் காணப்படும். அதப்படக்கியில் கிடைத்த 3 அடி உயரமுள்ள இந்த தானக்கல்லில் பூ போட்ட சக்கரம் மற்றும் சங்கு போன்ற அடையாளங்கள் கோட்டோவியமாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

திருவாழிக்கல் தானக்கல் வைணவ கோயில்களுக்கு நிலம் தானமாக வழங்கியதற்கு அடையாளம். தொன்மை வாய்ந்த இத்தகைய வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாப்பதில் தொல்லியல் துறையினர் கவனம் செலுத்த வேண்டும், என்று கூறினார்.

Tags: sivagangai
ShareTweetSendShare
Previous Post

ஐ.என்.எஸ். தலைவராக ராகேஷ் சர்மா தேர்வு

Next Post

கடற்படை துணை தளபதியாக தருண் சோப்தி பதவியேற்பு

Related News

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

இயற்பியல் ஒலிம்பியாட்டில் அமெரிக்க அணி சாதனை : வெள்ளை மாளிகையே பெருமைபடுத்திய இந்திய வம்சாவளி மாணவன்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் : நயினார் நாகேந்திரன்

கட்சியின் மூத்த தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

தயார் நிலையில் உள்ள படுக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies