தேசிய மஞ்சள் வாரியத்தை அமைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக மஞ்சள் விவசாயிகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது நாடு 1.1 மில்லியன் டன் மஞ்சள் உற்பத்தி செய்கிறது.
தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு, தமிழக மஞ்சள் விவசாயிகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது நாடு 1.1 மில்லியன் டன் மஞ்சள் உற்பத்தி செய்கிறது. இது, உலகளாவிய… pic.twitter.com/Hs2jeGINQM
— K.Annamalai (@annamalai_k) October 2, 2023
இது, உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 80% ஆகும். மேலும் தமிழகத்தின் மஞ்சள் நகரமான ஈரோடு, நிஜாமாபாத்திற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது பெரிய மஞ்சள் சந்தையாகும். கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம், நமது பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையிலான மத்திய அரசு, நமது ஈரோடு மஞ்சளுக்கு, புவிசார் குறியீடு வழங்கிப் பெருமைப்படுத்தியது.
புதியதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய மஞ்சள் வாரியம், மஞ்சள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் ஏற்றுமதியை முறைப்படுத்தி, மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் செழிப்பைக் கொண்டு வரும் என்பது உறுதி என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.