சீன அத்துமீறலை கண்காணிக்க எல்லையில் உளவுத்துறை: மத்திய அரசு ஒப்புதல்!
Mar 15, 2026, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன அத்துமீறலை கண்காணிக்க எல்லையில் உளவுத்துறை: மத்திய அரசு ஒப்புதல்!

லடாக் முதல் அருணாச்சலப் பிரேதசம் வரை செயல்படும்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 3, 2023, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையில் அதிகரித்து வரும் சீன நடவடிக்கைகள் மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ.) அத்துமீறல்களைக் கருத்தில் கொண்டு, லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான இந்தியா-சீனா எல்லையில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐ.டி.பி.பி.) எல்லைப் பணியிடங்களில் உளவுத்துறை அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

2020 ஜூன் மாதம் லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவத்துக்கும், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியா எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதோடு, உள்கட்டமைப்பையும் மேம்படுத்தி வருகிறது. மேலும், எல்லையோர கிராமங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அனைத்து எல்லையோர கிராமங்களிலும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்திலுள்ள சுனா செக்டாரில் சீனாவின் எல்லைக்கு மிக அருகில் உள்ள முதல் கிராமம் மாகோ. இக்கிராமத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், சாலைகள் அமைக்கப்பட்டன. மேலும், இந்தியா-சீனா எல்லை இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறையின் 180 புறக்காவல் நிலையங்கள் உள்ளன. சமீபத்தில் மேலும் 45 புறக்காவல் நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், இந்தியா-சீனா எல்லை முழுவதும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐ.டி.பி.பி.) பணியிடங்களில் உளவுத்துறை அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. எல்லை உளவுப்படை என்று அழைக்கப்படும் இந்த உளவுத்துறை பணியகத்தில் 4 முதல் 5 அதிகாரிகள் வரை இருப்பார்கள். இவ்வாறு பணியமர்த்தப்படும் பணியாளர்கள், எல்லைக்கு அப்பால் உள்ள செயல்பாடுகளைக் கண்காணித்து, உயர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்துடன் விவரத்தை பகிர்ந்து கொள்வார்கள். எனினும், இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதித்த தொகையை வெளியிட மறுத்துவிட்டது.

Tags: Centre approvesBorder Intelligence PostsLAC
ShareTweetSendShare
Previous Post

 ஊழல் திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு பஞ்சமில்லை!- அண்ணாமலை குற்றச்சாட்டு.

Next Post

டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவர் ராக்வெல் பெனா ரோட்ரிக்ஸ் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies