சீன அத்துமீறலை கண்காணிக்க எல்லையில் உளவுத்துறை: மத்திய அரசு ஒப்புதல்!
Oct 26, 2025, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன அத்துமீறலை கண்காணிக்க எல்லையில் உளவுத்துறை: மத்திய அரசு ஒப்புதல்!

லடாக் முதல் அருணாச்சலப் பிரேதசம் வரை செயல்படும்!

Web Desk by Web Desk
Oct 3, 2023, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையில் அதிகரித்து வரும் சீன நடவடிக்கைகள் மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ.) அத்துமீறல்களைக் கருத்தில் கொண்டு, லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான இந்தியா-சீனா எல்லையில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐ.டி.பி.பி.) எல்லைப் பணியிடங்களில் உளவுத்துறை அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

2020 ஜூன் மாதம் லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவத்துக்கும், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியா எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதோடு, உள்கட்டமைப்பையும் மேம்படுத்தி வருகிறது. மேலும், எல்லையோர கிராமங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அனைத்து எல்லையோர கிராமங்களிலும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்திலுள்ள சுனா செக்டாரில் சீனாவின் எல்லைக்கு மிக அருகில் உள்ள முதல் கிராமம் மாகோ. இக்கிராமத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், சாலைகள் அமைக்கப்பட்டன. மேலும், இந்தியா-சீனா எல்லை இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறையின் 180 புறக்காவல் நிலையங்கள் உள்ளன. சமீபத்தில் மேலும் 45 புறக்காவல் நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், இந்தியா-சீனா எல்லை முழுவதும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐ.டி.பி.பி.) பணியிடங்களில் உளவுத்துறை அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. எல்லை உளவுப்படை என்று அழைக்கப்படும் இந்த உளவுத்துறை பணியகத்தில் 4 முதல் 5 அதிகாரிகள் வரை இருப்பார்கள். இவ்வாறு பணியமர்த்தப்படும் பணியாளர்கள், எல்லைக்கு அப்பால் உள்ள செயல்பாடுகளைக் கண்காணித்து, உயர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்துடன் விவரத்தை பகிர்ந்து கொள்வார்கள். எனினும், இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதித்த தொகையை வெளியிட மறுத்துவிட்டது.

Tags: Centre approvesBorder Intelligence PostsLAC
ShareTweetSendShare
Previous Post

 ஊழல் திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு பஞ்சமில்லை!- அண்ணாமலை குற்றச்சாட்டு.

Next Post

டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவர் ராக்வெல் பெனா ரோட்ரிக்ஸ் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு!

Related News

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies