சீன அத்துமீறலை கண்காணிக்க எல்லையில் உளவுத்துறை: மத்திய அரசு ஒப்புதல்!
Jun 14, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன அத்துமீறலை கண்காணிக்க எல்லையில் உளவுத்துறை: மத்திய அரசு ஒப்புதல்!

லடாக் முதல் அருணாச்சலப் பிரேதசம் வரை செயல்படும்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 3, 2023, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையில் அதிகரித்து வரும் சீன நடவடிக்கைகள் மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ.) அத்துமீறல்களைக் கருத்தில் கொண்டு, லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான இந்தியா-சீனா எல்லையில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐ.டி.பி.பி.) எல்லைப் பணியிடங்களில் உளவுத்துறை அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

2020 ஜூன் மாதம் லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவத்துக்கும், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியா எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதோடு, உள்கட்டமைப்பையும் மேம்படுத்தி வருகிறது. மேலும், எல்லையோர கிராமங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அனைத்து எல்லையோர கிராமங்களிலும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்திலுள்ள சுனா செக்டாரில் சீனாவின் எல்லைக்கு மிக அருகில் உள்ள முதல் கிராமம் மாகோ. இக்கிராமத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், சாலைகள் அமைக்கப்பட்டன. மேலும், இந்தியா-சீனா எல்லை இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறையின் 180 புறக்காவல் நிலையங்கள் உள்ளன. சமீபத்தில் மேலும் 45 புறக்காவல் நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், இந்தியா-சீனா எல்லை முழுவதும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐ.டி.பி.பி.) பணியிடங்களில் உளவுத்துறை அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. எல்லை உளவுப்படை என்று அழைக்கப்படும் இந்த உளவுத்துறை பணியகத்தில் 4 முதல் 5 அதிகாரிகள் வரை இருப்பார்கள். இவ்வாறு பணியமர்த்தப்படும் பணியாளர்கள், எல்லைக்கு அப்பால் உள்ள செயல்பாடுகளைக் கண்காணித்து, உயர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்துடன் விவரத்தை பகிர்ந்து கொள்வார்கள். எனினும், இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதித்த தொகையை வெளியிட மறுத்துவிட்டது.

Tags: LACCentre approvesBorder Intelligence Posts
ShareTweetSendShare
Previous Post

 ஊழல் திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு பஞ்சமில்லை!- அண்ணாமலை குற்றச்சாட்டு.

Next Post

டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவர் ராக்வெல் பெனா ரோட்ரிக்ஸ் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies