சீன அத்துமீறலை கண்காணிக்க எல்லையில் உளவுத்துறை: மத்திய அரசு ஒப்புதல்!
Jul 29, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன அத்துமீறலை கண்காணிக்க எல்லையில் உளவுத்துறை: மத்திய அரசு ஒப்புதல்!

லடாக் முதல் அருணாச்சலப் பிரேதசம் வரை செயல்படும்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 3, 2023, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையில் அதிகரித்து வரும் சீன நடவடிக்கைகள் மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ.) அத்துமீறல்களைக் கருத்தில் கொண்டு, லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான இந்தியா-சீனா எல்லையில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐ.டி.பி.பி.) எல்லைப் பணியிடங்களில் உளவுத்துறை அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

2020 ஜூன் மாதம் லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவத்துக்கும், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியா எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதோடு, உள்கட்டமைப்பையும் மேம்படுத்தி வருகிறது. மேலும், எல்லையோர கிராமங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அனைத்து எல்லையோர கிராமங்களிலும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்திலுள்ள சுனா செக்டாரில் சீனாவின் எல்லைக்கு மிக அருகில் உள்ள முதல் கிராமம் மாகோ. இக்கிராமத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், சாலைகள் அமைக்கப்பட்டன. மேலும், இந்தியா-சீனா எல்லை இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறையின் 180 புறக்காவல் நிலையங்கள் உள்ளன. சமீபத்தில் மேலும் 45 புறக்காவல் நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், இந்தியா-சீனா எல்லை முழுவதும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐ.டி.பி.பி.) பணியிடங்களில் உளவுத்துறை அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. எல்லை உளவுப்படை என்று அழைக்கப்படும் இந்த உளவுத்துறை பணியகத்தில் 4 முதல் 5 அதிகாரிகள் வரை இருப்பார்கள். இவ்வாறு பணியமர்த்தப்படும் பணியாளர்கள், எல்லைக்கு அப்பால் உள்ள செயல்பாடுகளைக் கண்காணித்து, உயர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்துடன் விவரத்தை பகிர்ந்து கொள்வார்கள். எனினும், இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதித்த தொகையை வெளியிட மறுத்துவிட்டது.

Tags: Centre approvesBorder Intelligence PostsLAC
ShareTweetSendShare
Previous Post

 ஊழல் திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு பஞ்சமில்லை!- அண்ணாமலை குற்றச்சாட்டு.

Next Post

டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவர் ராக்வெல் பெனா ரோட்ரிக்ஸ் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies