ஆம் ஆத்மி எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
Mar 15, 2026, 02:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம் ஆத்மி எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான விசாரணை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 4, 2023, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி மதுக்கொள்கை ஊழல் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளர் தினேஷ் அரோரா மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகுண்டா ரெட்டியின் மகன் ராகவ் மங்குடா ஆகியோர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

தேசியத் தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதற்காக, 749 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமம் வழங்கப்பட்டது. இதன்படி, மதுக்கடை உரிமையாளர்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு இலவசத்தை வழங்கவும், அதிகாலை 3 மணி வரை கடைகளைத் திறந்து வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த புதிய மதுபானக் கொள்கையில் பல்வேறு விவகாரங்களில் ஊழல், முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இது தொடர்பாக டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், அம்மாநில துணை நிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனாவிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து, மதுபானக்கொள்கை ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ம் தேதி பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதோடு, விசாரணையும் மேற்கொண்டது. பின்னர், இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. மேலும், புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் பலமுறை விசாரணையும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர்.சி.பி. காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மகுண்டா சீனிவாசலு ரெட்டியின் மகன் ராகவ் மகுண்டா, மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளரும், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபருமான தினேஷ் அரோரா ஆகியோர் நேற்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, மகுந்தா மற்றும் அரோரா இருவரையும் சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் மன்னித்து, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும், வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் சி.பி.ஐ.யிடம் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். எனினும், இச்சோதனை குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் மறுத்து விட்டன.

Tags: ED RAIDAAP MPSanjai singh
ShareTweetSendShare
Previous Post

சீனாவிடம் முறைகேடான நிதி; இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட நியூஸ் கிளிக்: நடந்தது என்ன?

Next Post

உயரம் தாண்டுதல் இந்தியா வெள்ளி : பிரதமர் வாழ்த்து !

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies