டொமினிக்கன் குடியரசுத் துணைத் தலைவருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!
Mar 15, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டொமினிக்கன் குடியரசுத் துணைத் தலைவருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

வர்த்தகம், கல்வி, பாதுகாப்பு, விண்வெளி ஆகியவற்றில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 4, 2023, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டொமினிகன் குடியரசு துணைத் தலைவர் ராகுல் பெனாவை, டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.

டொமினிக்கன் குடியரசு நாட்டின் துணைத் தலைவர் ராகுல் பெனா, 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்திருக்கிறார். நேற்று காலை டெல்லியை வந்தடைந்தவர், முதலில் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். அப்போது, அவரது இந்தியாவுக்கான முதல் வருகையை வரவேற்ற குடியரசுத் தலைவர் முர்மு, இந்தியாவும், டொமினிகன் குடியரசும் தங்களது இராஜதந்திர உறவுகளின் 25 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த விஜயத்தின் நேரம் மிகவும் பொருத்தமானது என்றார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் நட்புடன் இருப்பதாகவும், உலகளாவிய பிரச்சனைகளில் பரந்த பார்வைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டவர், லத்தீன் அமெரிக்காவில் டொமினிகன் குடியரசு இந்தியாவின் 8-வது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளதாகவும் கூறினார். அதேபோல, மருந்துப் பொருட்கள், கடல்சார் அறிவியல், வானிலை ஆய்வு, பேரிடரை எதிர்க்கும் உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் பணம் செலுத்தும் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் எங்களது அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்றார்.

தொடர்ந்து, இந்தியா – டொமினிகன் குடியரசு ஒத்துழைப்பின் மையத் தூண்களில் திறன் மேம்பாடும் ஒன்று என்று கூறிய குடியரசுத் தலைவர் முர்மு, சமீபத்தில் இணைய பாதுகாப்பு மற்றும் ரிமோட் சென்சிங் ஆகிய முக்கியமான துறைகளில் டொமினிகன் குடியரசு அதிகாரிகளுக்கு இரண்டு சிறப்பு ஐ.டி.இ.சி. பயிற்சி வகுப்புகளை இந்தியா ஏற்பாடு செய்திருப்பதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அதோடு, இந்தியாவிற்கும் டொமினிகன் குடியரசுக்கும் இடையிலான தொடர் பரிமாற்றங்களும், தொடர்புகளும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இதன் பிறகு, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல் பெனா அஞ்சலி செலுத்தினார். மேலும், நாடாளுமன்ற வளாகத்திற்கும் சென்றார். அங்கு அவரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்றார். தொடர்ந்து, ராகுல் பெனாவை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். அப்போது, வர்த்தகம், கல்வி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் புதுப்பிக்கத்தக்கவல்ல எரிசக்தி ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும், பிராந்திய மற்றும் பலதரப்பு பிரச்சனைகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இன்று துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கரை சந்தித்து பேசும் ராகுல் பெனா, இந்திய உலக விவகார கவுன்சிலின் 45-வது கூட்டத்திலும் உரையாற்றுகிறார். நாளை ஆக்ராவுக்கு செல்கிறார்.

Tags: Minister jaishankarVice PresidentNew DelhiDominican RepublicRaquel Pena
ShareTweetSendShare
Previous Post

சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் – அண்ணாமலை!

Next Post

ஆசிய விளையாட்டு, வரலாற்று சாதனை படைத்த இந்தியா !- பிரதமர் மோடி பெருமிதம்

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies