டொமினிக்கன் குடியரசுத் துணைத் தலைவருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!
Sep 13, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டொமினிக்கன் குடியரசுத் துணைத் தலைவருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

வர்த்தகம், கல்வி, பாதுகாப்பு, விண்வெளி ஆகியவற்றில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 4, 2023, 03:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டொமினிகன் குடியரசு துணைத் தலைவர் ராகுல் பெனாவை, டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.

டொமினிக்கன் குடியரசு நாட்டின் துணைத் தலைவர் ராகுல் பெனா, 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்திருக்கிறார். நேற்று காலை டெல்லியை வந்தடைந்தவர், முதலில் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். அப்போது, அவரது இந்தியாவுக்கான முதல் வருகையை வரவேற்ற குடியரசுத் தலைவர் முர்மு, இந்தியாவும், டொமினிகன் குடியரசும் தங்களது இராஜதந்திர உறவுகளின் 25 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த விஜயத்தின் நேரம் மிகவும் பொருத்தமானது என்றார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் நட்புடன் இருப்பதாகவும், உலகளாவிய பிரச்சனைகளில் பரந்த பார்வைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டவர், லத்தீன் அமெரிக்காவில் டொமினிகன் குடியரசு இந்தியாவின் 8-வது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளதாகவும் கூறினார். அதேபோல, மருந்துப் பொருட்கள், கடல்சார் அறிவியல், வானிலை ஆய்வு, பேரிடரை எதிர்க்கும் உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் பணம் செலுத்தும் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் எங்களது அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்றார்.

தொடர்ந்து, இந்தியா – டொமினிகன் குடியரசு ஒத்துழைப்பின் மையத் தூண்களில் திறன் மேம்பாடும் ஒன்று என்று கூறிய குடியரசுத் தலைவர் முர்மு, சமீபத்தில் இணைய பாதுகாப்பு மற்றும் ரிமோட் சென்சிங் ஆகிய முக்கியமான துறைகளில் டொமினிகன் குடியரசு அதிகாரிகளுக்கு இரண்டு சிறப்பு ஐ.டி.இ.சி. பயிற்சி வகுப்புகளை இந்தியா ஏற்பாடு செய்திருப்பதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அதோடு, இந்தியாவிற்கும் டொமினிகன் குடியரசுக்கும் இடையிலான தொடர் பரிமாற்றங்களும், தொடர்புகளும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இதன் பிறகு, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல் பெனா அஞ்சலி செலுத்தினார். மேலும், நாடாளுமன்ற வளாகத்திற்கும் சென்றார். அங்கு அவரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்றார். தொடர்ந்து, ராகுல் பெனாவை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். அப்போது, வர்த்தகம், கல்வி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் புதுப்பிக்கத்தக்கவல்ல எரிசக்தி ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும், பிராந்திய மற்றும் பலதரப்பு பிரச்சனைகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இன்று துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கரை சந்தித்து பேசும் ராகுல் பெனா, இந்திய உலக விவகார கவுன்சிலின் 45-வது கூட்டத்திலும் உரையாற்றுகிறார். நாளை ஆக்ராவுக்கு செல்கிறார்.

Tags: Minister jaishankarVice PresidentNew DelhiDominican RepublicRaquel Pena
Share
Tweet
SendShare
Previous Post

சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் – அண்ணாமலை!

Next Post

ஆசிய விளையாட்டு, வரலாற்று சாதனை படைத்த இந்தியா !- பிரதமர் மோடி பெருமிதம்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies