ஆயுஷ்மான் பவ திட்டம்: 64,000 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு!
Jan 14, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுஷ்மான் பவ திட்டம்: 64,000 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு!

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடந்தது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 4, 2023, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய அளவில் ஆயுஷ்மான் பவ பிரச்சாரத்தின் கீழ், சுமார் 64,000 பேர் தங்களது உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசு சார்பில் ஆயுஷ்மான் பவ திட்டம் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார். மேலும், செப்டம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2-ம் தேதி வரை நடைபெறும், இந்நிகழ்ச்சியின்போது 60,000 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்படும் என்றும் கூறினார். இது ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெறும் திட்டமாகும்.

அதன்படி, இத்திட்டம் செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்தான் 64,000 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்து, பதிவு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார். இத்திட்டத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், “ஆயுஷ்மான் பவ திட்டம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 2.70 லட்சம் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம், 1.61 கோடி மக்கள் பயன் பெற்றனர். இத்திட்டத்தின் கீழ், சுமார் 64 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டது. 1 கோடிக்கும் அதிகமான ஏ.பி.ஹெச்.ஏ. அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

மேலும், இத்திட்டத்தின் கீழ், 14,157 இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் 2,28,000 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டது. அதோடு, 23 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் ஓ.பி.டி. ஆலோசனைகளுக்கு வருகை தந்தனர். இது தவிர, 30,000 பெரிய மற்றும் சிறிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையானது, ஒவ்வொரு கிராமம் மற்றும் பஞ்சாயத்தில் உள்ள ஆயுஷ்மான் சபைகள் மூலம் சுகாதார சேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.

Tags: Ayusman bhavacampaignorgans
ShareTweetSendShare
Previous Post

நாளை திட்டமிட்டபடி பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும்!

Next Post

சந்திரயான் -3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு டாக்டர் பட்டம் – முழு விவரம்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies