ஆயுஷ்மான் பவ திட்டம்: 64,000 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு!
Oct 26, 2025, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுஷ்மான் பவ திட்டம்: 64,000 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு!

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடந்தது!

Web Desk by Web Desk
Oct 4, 2023, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய அளவில் ஆயுஷ்மான் பவ பிரச்சாரத்தின் கீழ், சுமார் 64,000 பேர் தங்களது உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசு சார்பில் ஆயுஷ்மான் பவ திட்டம் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார். மேலும், செப்டம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2-ம் தேதி வரை நடைபெறும், இந்நிகழ்ச்சியின்போது 60,000 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்படும் என்றும் கூறினார். இது ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெறும் திட்டமாகும்.

அதன்படி, இத்திட்டம் செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்தான் 64,000 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்து, பதிவு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார். இத்திட்டத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், “ஆயுஷ்மான் பவ திட்டம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 2.70 லட்சம் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம், 1.61 கோடி மக்கள் பயன் பெற்றனர். இத்திட்டத்தின் கீழ், சுமார் 64 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டது. 1 கோடிக்கும் அதிகமான ஏ.பி.ஹெச்.ஏ. அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

மேலும், இத்திட்டத்தின் கீழ், 14,157 இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் 2,28,000 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டது. அதோடு, 23 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் ஓ.பி.டி. ஆலோசனைகளுக்கு வருகை தந்தனர். இது தவிர, 30,000 பெரிய மற்றும் சிறிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையானது, ஒவ்வொரு கிராமம் மற்றும் பஞ்சாயத்தில் உள்ள ஆயுஷ்மான் சபைகள் மூலம் சுகாதார சேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.

Tags: Ayusman bhavacampaignorgans
ShareTweetSendShare
Previous Post

நாளை திட்டமிட்டபடி பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும்!

Next Post

சந்திரயான் -3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு டாக்டர் பட்டம் – முழு விவரம்

Related News

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

Load More

அண்மைச் செய்திகள்

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies