ஆயுஷ்மான் பவ திட்டம்: 64,000 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு!
Jul 29, 2026, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுஷ்மான் பவ திட்டம்: 64,000 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு!

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடந்தது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 4, 2023, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய அளவில் ஆயுஷ்மான் பவ பிரச்சாரத்தின் கீழ், சுமார் 64,000 பேர் தங்களது உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசு சார்பில் ஆயுஷ்மான் பவ திட்டம் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார். மேலும், செப்டம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2-ம் தேதி வரை நடைபெறும், இந்நிகழ்ச்சியின்போது 60,000 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்படும் என்றும் கூறினார். இது ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெறும் திட்டமாகும்.

அதன்படி, இத்திட்டம் செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்தான் 64,000 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்து, பதிவு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார். இத்திட்டத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், “ஆயுஷ்மான் பவ திட்டம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 2.70 லட்சம் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம், 1.61 கோடி மக்கள் பயன் பெற்றனர். இத்திட்டத்தின் கீழ், சுமார் 64 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டது. 1 கோடிக்கும் அதிகமான ஏ.பி.ஹெச்.ஏ. அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

மேலும், இத்திட்டத்தின் கீழ், 14,157 இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் 2,28,000 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டது. அதோடு, 23 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் ஓ.பி.டி. ஆலோசனைகளுக்கு வருகை தந்தனர். இது தவிர, 30,000 பெரிய மற்றும் சிறிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையானது, ஒவ்வொரு கிராமம் மற்றும் பஞ்சாயத்தில் உள்ள ஆயுஷ்மான் சபைகள் மூலம் சுகாதார சேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.

Tags: Ayusman bhavacampaignorgans
ShareTweetSendShare
Previous Post

நாளை திட்டமிட்டபடி பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும்!

Next Post

சந்திரயான் -3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு டாக்டர் பட்டம் – முழு விவரம்

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies