2 இருக்கை தேஜாஸ் போர் விமானம்: விமானப்படையிடம் ஒப்படைப்பு!
Mar 15, 2026, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 இருக்கை தேஜாஸ் போர் விமானம்: விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 4, 2023, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டு இருக்கைகள் கொண்ட இலகு ரக தேஜாஸ் போர் விமானத்தை, இந்திய விமானப் படையிடம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்.) நிறுவனம் இன்று ஒப்படைத்தது. பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜய் பட் பெற்றுக்கொண்டார்.

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், தேஜாஸ் எனப்படும் இலகு ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு 83 போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. மேலும், எதிர்வரும் காலங்களில் 220 போர் விமானங்கள் கொண்ட மிகப்பெரிய விமானப்படையை உருவாக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால், இந்த தேஜாஸ் விமானங்களில் ஒரே ஒரு விமானி இருக்கை மட்டுமே இருக்கும்.

இந்த நிலையில், 2 இருக்கைகள் கொண்ட இலகு ரக தேஜாஸ் போர் விமானத்தை தயாரிக்க ஹெச்.ஏ.எல். நிறுவனம் முன்வந்தது. இதையடுத்து, 2 இருக்கைகள் கொண்ட 18 விமானங்களுக்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்தது. இதில், முதல்கட்டமாக இந்தாண்டு 8 விமானங்களும், 2026-2027-ம் நிதியாண்டில் 10 விமானங்களையும் வழங்க ஹெச்.ஏ.எல். முன்வந்தது. அந்த வகையில், முதல் விமானம் இன்று வழங்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக, மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தலைமையில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில், இந்த விமானத்தை இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்.) தலைமை ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சௌத்ரி, “இன்று ஒரு முக்கியமான நாள். 2 இருக்கைகள் கொண்ட முதல் இலகு ரக தேஜாஸ் போர் விமானத்தை ஏற்றுக்கொள்வதில் பெருமைப்பட வேண்டிய நாள். இந்த நாள் இந்திய உள்நாட்டு விமானத் துறையின் திறமையை வெளிப்படுத்தும். வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருக்கிறது. மேலும், விமானப்படையின் செயல்திறன் மற்றும் சக்தியை அதிகரித்திருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட், “மேம்பட்ட அம்சங்களுடன் இரட்டை இருக்கைகள் கொண்ட தேஜாஸ் மூலம் ஆத்மா நிர்பார் பாரதத்தின் குறிக்கோள் நிறைவேறி இருக்கிறது. இன்று ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம். மேலும், இது உள்நாட்டு திறன்களை வெளிப்படுத்தும் முக்கியமான சாதனையாகும்” என்றார். நிகழ்ச்சியில், ஹெச்.ஏ.எல். நிர்வாக இயக்குனர் சி.பி.அனந்தகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இந்த போர் விமானம் 4.5 தலைமுறை விமானம். அனைத்து காலநிலையிலும் பறக்கக் கூடிய திறன் படைத்தது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த விமானம், நிலையான நிலைத்தன்மை, விமானக் கட்டுப்பாடு, மேம்பட்ட கண்ணாடி காக்பிட், ஒருங்கிணைந்த டிஜிட்டல் ஏவியோனிக்ஸ் அமைப்புகள் மற்றும் ஏர்ஃப்ரேமிற்கான மேம்பட்ட கலவைப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

Tags: IAFLCATejas
ShareTweetSendShare
Previous Post

தொடரும் மழை: உயரும் அணைகளின் நீர்மட்டம்!

Next Post

உலகக்கோப்பை அணிகளின் விவரம் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies