2 இருக்கை தேஜாஸ் போர் விமானம்: விமானப்படையிடம் ஒப்படைப்பு!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 இருக்கை தேஜாஸ் போர் விமானம்: விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 4, 2023, 06:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இரண்டு இருக்கைகள் கொண்ட இலகு ரக தேஜாஸ் போர் விமானத்தை, இந்திய விமானப் படையிடம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்.) நிறுவனம் இன்று ஒப்படைத்தது. பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜய் பட் பெற்றுக்கொண்டார்.

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், தேஜாஸ் எனப்படும் இலகு ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு 83 போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. மேலும், எதிர்வரும் காலங்களில் 220 போர் விமானங்கள் கொண்ட மிகப்பெரிய விமானப்படையை உருவாக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால், இந்த தேஜாஸ் விமானங்களில் ஒரே ஒரு விமானி இருக்கை மட்டுமே இருக்கும்.

இந்த நிலையில், 2 இருக்கைகள் கொண்ட இலகு ரக தேஜாஸ் போர் விமானத்தை தயாரிக்க ஹெச்.ஏ.எல். நிறுவனம் முன்வந்தது. இதையடுத்து, 2 இருக்கைகள் கொண்ட 18 விமானங்களுக்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்தது. இதில், முதல்கட்டமாக இந்தாண்டு 8 விமானங்களும், 2026-2027-ம் நிதியாண்டில் 10 விமானங்களையும் வழங்க ஹெச்.ஏ.எல். முன்வந்தது. அந்த வகையில், முதல் விமானம் இன்று வழங்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக, மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தலைமையில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில், இந்த விமானத்தை இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்.) தலைமை ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சௌத்ரி, “இன்று ஒரு முக்கியமான நாள். 2 இருக்கைகள் கொண்ட முதல் இலகு ரக தேஜாஸ் போர் விமானத்தை ஏற்றுக்கொள்வதில் பெருமைப்பட வேண்டிய நாள். இந்த நாள் இந்திய உள்நாட்டு விமானத் துறையின் திறமையை வெளிப்படுத்தும். வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருக்கிறது. மேலும், விமானப்படையின் செயல்திறன் மற்றும் சக்தியை அதிகரித்திருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட், “மேம்பட்ட அம்சங்களுடன் இரட்டை இருக்கைகள் கொண்ட தேஜாஸ் மூலம் ஆத்மா நிர்பார் பாரதத்தின் குறிக்கோள் நிறைவேறி இருக்கிறது. இன்று ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம். மேலும், இது உள்நாட்டு திறன்களை வெளிப்படுத்தும் முக்கியமான சாதனையாகும்” என்றார். நிகழ்ச்சியில், ஹெச்.ஏ.எல். நிர்வாக இயக்குனர் சி.பி.அனந்தகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இந்த போர் விமானம் 4.5 தலைமுறை விமானம். அனைத்து காலநிலையிலும் பறக்கக் கூடிய திறன் படைத்தது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த விமானம், நிலையான நிலைத்தன்மை, விமானக் கட்டுப்பாடு, மேம்பட்ட கண்ணாடி காக்பிட், ஒருங்கிணைந்த டிஜிட்டல் ஏவியோனிக்ஸ் அமைப்புகள் மற்றும் ஏர்ஃப்ரேமிற்கான மேம்பட்ட கலவைப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

Tags: IAFLCATejas
Share
Tweet
SendShare
Previous Post

தொடரும் மழை: உயரும் அணைகளின் நீர்மட்டம்!

Next Post

உலகக்கோப்பை அணிகளின் விவரம் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies