தொடரும் மழை: உயரும் அணைகளின் நீர்மட்டம்!
Jul 3, 2025, 09:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடரும் மழை: உயரும் அணைகளின் நீர்மட்டம்!

Web Desk by Web Desk
Oct 4, 2023, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக 6,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து உள்ளதால், சுமார் 15 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று 89 அடியாக இருந்த நிலையில், மேலும் சுமார் 4 அடி உயர்ந்து, இன்று 92.75 அடியை எட்டியது. மேலும், பாபநாசம் அணை பகுதிகளில் 8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதேபோல், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று 107.61 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 3247 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், சேர்வாறு அணை பகுதிகளில் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. 52 அடி உயரம் கொண்ட அந்த அணையில் 28.75 அடி நீர் இருப்பு உள்ளது.

தொடர் விடுமுறை என்பதால், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கன்னிமாரா தோப்பு ஓடையில் குளிக்க இன்று காலை வந்தனர். ஆனால், தொடர் சாரல் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags: dam
ShareTweetSendShare
Previous Post

ஜாதி வாரி கணக்கெடுப்பு விவகாரம்: உயர்நீதி மன்ற உத்தரவு – முழு விவரம்!

Next Post

2 இருக்கை தேஜாஸ் போர் விமானம்: விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Related News

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies