ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!
Jan 14, 2026, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!

குல்காம் மாவட்டத்தில் தொடரும் வேட்டை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 4, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் மாநில காவல்துறை டி.எஸ்.பி. ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் ஒரு வாரம் நடத்திய தாக்குதலில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் உட்பட சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சூழலில், ரஜோரி மாவட்டம் கலகோட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் மாநில காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இராணுவத்தினரும், மாநில காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது, கலகோட் வனப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு ஜவான்கள் காயமடைந்தனர். இதையடுத்து, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குல்காம் மாவட்டத்திலும் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது, குஜ்ஜார் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதுகுறித்து மாநில காவல்துறை மண்டலம் சார்பில் வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவில், “குல்காம் மாவட்டத்திலுள்ள குஜ்ஜார் பகுதியில் என்கவுன்ட்டர் தொடங்கி இருக்கிறது. மாநில காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் இந்த என்கவுன்ட்டரில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் விவரங்கள் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து மாநில காவல்துறை வெளியிட்டிருக்கும் மற்றொரு பதிவில், “என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றன . சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது. மேலும் விவரங்கள் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: encounterjammu kashmir2 Terroristkilled
ShareTweetSendShare
Previous Post

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Next Post

ஷார்ஜாவில் நிதின் கட்கரி: ஆகாயப் பேருந்தில் பயணம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies