ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!
Jul 25, 2025, 05:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!

குல்காம் மாவட்டத்தில் தொடரும் வேட்டை!

Web Desk by Web Desk
Oct 4, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் மாநில காவல்துறை டி.எஸ்.பி. ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் ஒரு வாரம் நடத்திய தாக்குதலில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் உட்பட சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சூழலில், ரஜோரி மாவட்டம் கலகோட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் மாநில காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இராணுவத்தினரும், மாநில காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது, கலகோட் வனப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு ஜவான்கள் காயமடைந்தனர். இதையடுத்து, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குல்காம் மாவட்டத்திலும் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது, குஜ்ஜார் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதுகுறித்து மாநில காவல்துறை மண்டலம் சார்பில் வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவில், “குல்காம் மாவட்டத்திலுள்ள குஜ்ஜார் பகுதியில் என்கவுன்ட்டர் தொடங்கி இருக்கிறது. மாநில காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் இந்த என்கவுன்ட்டரில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் விவரங்கள் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து மாநில காவல்துறை வெளியிட்டிருக்கும் மற்றொரு பதிவில், “என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றன . சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது. மேலும் விவரங்கள் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: encounterjammu kashmir2 Terroristkilled
ShareTweetSendShare
Previous Post

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Next Post

ஷார்ஜாவில் நிதின் கட்கரி: ஆகாயப் பேருந்தில் பயணம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies