ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!

குல்காம் மாவட்டத்தில் தொடரும் வேட்டை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 4, 2023, 07:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் மாநில காவல்துறை டி.எஸ்.பி. ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் ஒரு வாரம் நடத்திய தாக்குதலில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் உட்பட சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சூழலில், ரஜோரி மாவட்டம் கலகோட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் மாநில காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இராணுவத்தினரும், மாநில காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது, கலகோட் வனப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு ஜவான்கள் காயமடைந்தனர். இதையடுத்து, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குல்காம் மாவட்டத்திலும் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது, குஜ்ஜார் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதுகுறித்து மாநில காவல்துறை மண்டலம் சார்பில் வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவில், “குல்காம் மாவட்டத்திலுள்ள குஜ்ஜார் பகுதியில் என்கவுன்ட்டர் தொடங்கி இருக்கிறது. மாநில காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் இந்த என்கவுன்ட்டரில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் விவரங்கள் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து மாநில காவல்துறை வெளியிட்டிருக்கும் மற்றொரு பதிவில், “என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றன . சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது. மேலும் விவரங்கள் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: encounterjammu kashmir2 Terroristkilled
Share
Tweet
SendShare
Previous Post

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Next Post

ஷார்ஜாவில் நிதின் கட்கரி: ஆகாயப் பேருந்தில் பயணம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies