சிக்கிம் வெள்ளம்: 14 பேர் பலி... 102 பேர் மாயம்!
Jan 14, 2026, 11:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கிம் வெள்ளம்: 14 பேர் பலி… 102 பேர் மாயம்!

3,000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 5, 2023, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 102 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், 3,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம்மில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில், நேற்று அதிகாலை நேரத்தில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், 100 மி.மீட்டர் அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, லாச்சென் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டீஸ்டா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இராணுவ வாகனம் வெள்ளத்தில் மூழ்கியதில் 23 ஜவான்களை காணவில்லை என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சிக்கிம் தலைமைச் செயலாளர் வி.பி.பதக் பகிர்ந்துள்ள தகவலின்படி, “மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை காரணமாக லோனாக் ஏரியின் கரை உடைந்து டீஸ்டா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. டீஸ்டா ஸ்டேஜ் 3 அணை உடைந்த சுங்தாங்கில் 12 முதல் 14 தொழிலாளர்கள்வரை இன்னும் அணையின் சுரங்கங்களில் சிக்கித் தவிக்கின்றனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 26 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 உயிரிழந்துள்ளனர். 102 பேரை காணமவில்லை. பர்தாங்கில் 23 இராணுவ வீரர்களை காணவில்லை என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, 3,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாநிலத்தில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 கூடுதல் படைப்பிரிவுகளை மாநில அரசு கேட்டிருந்த நிலையில், மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு படைப்பிரிவு ரங்போ மற்றும் சிங்டம் நகரங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறது. தற்போது, வரவிருக்கும் படைப்பிரிவு மீட்பு நடவடிக்கைகளுக்காக சுங்தாங்கிற்கு விமானம் மூலம் அனுப்பப்படும்.

அதேபோல், உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, வானிலை மேம்பட்டவுடன் உணவு மற்றும் சிவில் சப்ளைகள் சுங்தாங்கிற்கு கொண்டு செல்லப்படும். இதற்கிடையே, மாநிலத்தில் ரேஷன் தட்டுப்பாடு ஏற்படும் என்று மாநில அதிகாரிகள் அஞ்சுகின்றனர். சிலிகுரி, பெய்லி பாலங்களில் இருந்து தேவையான பொருட்கள் இந்திய இராணுவம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மூலம் அமைக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

பெருவெள்ளத்தில் சுங்தாங்கில் உள்ள காவல் நிலையம் கூட அழிக்கப்பட்டுள்ளது. மேலும், மங்கன் மாவட்டத்தில் உள்ள சங்கலான் மற்றும் டூங்கில் ஃபிளாஷ் வெள்ளத்தால் ஃபைபர் கேபிள் இணைப்புகளும் அழிக்கப்பட்டதால், சுங்தாங் மற்றும் வடக்கு சிக்கிமின் பெரும்பாலான மொபைல் நெட்வொர்க் இணைப்பு தடைப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக, சிங்டம், ரங்போ, டிக்சு மற்றும் ஆதர்ஷ் காவ்ன் ஆகிய இடங்களில் 18 நிவாரண முகாம்களை மாநில அரசு அமைத்திருக்கிறது.

எனினும், சுங்தாங்குடன் தொடர்பு இல்லாததால், அங்குள்ள நிவாரண முகாம்களை இந்திய இராணுவம் மற்றும் பிற துணை இராணுவப் படையினர் அமைத்து வருகின்றனர்.

Tags: floodsikkim14 killed
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!

Next Post

கன்னியாகுமரியில் தொடரும் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies