சிக்கிம் வெள்ளம்: 14 பேர் பலி... 102 பேர் மாயம்!
Jul 26, 2025, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கிம் வெள்ளம்: 14 பேர் பலி… 102 பேர் மாயம்!

3,000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு!

Web Desk by Web Desk
Oct 5, 2023, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 102 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், 3,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம்மில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில், நேற்று அதிகாலை நேரத்தில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், 100 மி.மீட்டர் அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, லாச்சென் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டீஸ்டா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இராணுவ வாகனம் வெள்ளத்தில் மூழ்கியதில் 23 ஜவான்களை காணவில்லை என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சிக்கிம் தலைமைச் செயலாளர் வி.பி.பதக் பகிர்ந்துள்ள தகவலின்படி, “மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை காரணமாக லோனாக் ஏரியின் கரை உடைந்து டீஸ்டா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. டீஸ்டா ஸ்டேஜ் 3 அணை உடைந்த சுங்தாங்கில் 12 முதல் 14 தொழிலாளர்கள்வரை இன்னும் அணையின் சுரங்கங்களில் சிக்கித் தவிக்கின்றனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 26 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 உயிரிழந்துள்ளனர். 102 பேரை காணமவில்லை. பர்தாங்கில் 23 இராணுவ வீரர்களை காணவில்லை என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, 3,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாநிலத்தில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 கூடுதல் படைப்பிரிவுகளை மாநில அரசு கேட்டிருந்த நிலையில், மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு படைப்பிரிவு ரங்போ மற்றும் சிங்டம் நகரங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறது. தற்போது, வரவிருக்கும் படைப்பிரிவு மீட்பு நடவடிக்கைகளுக்காக சுங்தாங்கிற்கு விமானம் மூலம் அனுப்பப்படும்.

அதேபோல், உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, வானிலை மேம்பட்டவுடன் உணவு மற்றும் சிவில் சப்ளைகள் சுங்தாங்கிற்கு கொண்டு செல்லப்படும். இதற்கிடையே, மாநிலத்தில் ரேஷன் தட்டுப்பாடு ஏற்படும் என்று மாநில அதிகாரிகள் அஞ்சுகின்றனர். சிலிகுரி, பெய்லி பாலங்களில் இருந்து தேவையான பொருட்கள் இந்திய இராணுவம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மூலம் அமைக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

பெருவெள்ளத்தில் சுங்தாங்கில் உள்ள காவல் நிலையம் கூட அழிக்கப்பட்டுள்ளது. மேலும், மங்கன் மாவட்டத்தில் உள்ள சங்கலான் மற்றும் டூங்கில் ஃபிளாஷ் வெள்ளத்தால் ஃபைபர் கேபிள் இணைப்புகளும் அழிக்கப்பட்டதால், சுங்தாங் மற்றும் வடக்கு சிக்கிமின் பெரும்பாலான மொபைல் நெட்வொர்க் இணைப்பு தடைப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக, சிங்டம், ரங்போ, டிக்சு மற்றும் ஆதர்ஷ் காவ்ன் ஆகிய இடங்களில் 18 நிவாரண முகாம்களை மாநில அரசு அமைத்திருக்கிறது.

எனினும், சுங்தாங்குடன் தொடர்பு இல்லாததால், அங்குள்ள நிவாரண முகாம்களை இந்திய இராணுவம் மற்றும் பிற துணை இராணுவப் படையினர் அமைத்து வருகின்றனர்.

Tags: floodsikkim14 killed
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!

Next Post

கன்னியாகுமரியில் தொடரும் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

Related News

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies