தீவிரவாதத்தை வேரறுக்க மோடி அரசு உறுதி: அமித்ஷா!
Oct 26, 2025, 10:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதத்தை வேரறுக்க மோடி அரசு உறுதி: அமித்ஷா!

என்.ஐ.ஏ.வின் தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டுக்கு முன்பு ட்வீட்!

Web Desk by Web Desk
Oct 5, 2023, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டிலிருந்து தீவிரவாதத்தை வேரறுப்பதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

தேசியத் தலைநகர் டெல்லியில் இன்று தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) தீவிரவாத எதிர்ப்பு 3-வது மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதற்கு முன்பு அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நமது நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது.

இன்று என்.ஐ.ஏ.வின் 3-வது தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டைத் தொடங்கி வைக்கிறேன். இம்மாநாட்டில் நமது தேசம் ஏற்றுக்கொண்ட தீவிரவாதத்திற்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கைக்குப் பின்னால் மோடி ஜியின் தொலைநோக்குப் பார்வை குறித்து விளக்க உள்ளேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

டெல்லி சாணக்யபுரி பகுதியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடைபெறும் இம்மாநாட்டில், தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்தும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கான சாலை வரைபடத்தை தயாரிப்பது குறித்தும், சம்பந்தப்பட்ட பிற அமைப்புகள் மற்றும் அரசுப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நிதியுதவி முதல் தீவிரவாத எதிர்ப்பு விவகாரங்கள் வரையிலும், காலிஸ்தானி போன்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் குண்டர்களின் வெளிநாட்டு தொடர்புகள் ஆகியவை குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும்.

இம்மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள மாநில காவல்துறையின் தீவிரவாத எதிர்ப்புப் படை மற்றும் பல்வேறு படைகளைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்புத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.

 

The Modi government is firmly committed to rooting out terrorism from our country.
Will inaugurate the '3rd Anti-terror Conference' hosted by @NIA_India in New Delhi today and illustrate Modi Ji's vision behind the policy of zero tolerance for terrorism adopted by our nation. https://t.co/LhdepmmAeY

— Amit Shah (@AmitShah) October 5, 2023

 

Tags: NiaAmit shaConferrence
ShareTweetSendShare
Previous Post

உலகக் கோப்பை முதல் போட்டி : இங்கிலாந்து – நியூசிலாந்து !

Next Post

வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய திமுக எம்பி – 40 இடங்களில் ரெய்டு!

Related News

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies