என்எல்சி அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய மக்கள் – நெய்வேலியில் பரபரப்பு!
Aug 20, 2025, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்எல்சி அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய மக்கள் – நெய்வேலியில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்எல்சி-க்கு சொந்தமான நிலத்தில் வேலி அமைக்கச் சென்ற அந்நிறுவன அதிகாரிகளைக் கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சுரங்க விரிவாக்கப் பணிக்காக சேத்தியாதோப்பு பகுதியில் விளைநிலங்களைக் கையகப்படுத்தியது. அதற்கான இழப்பீடுகளையும் வழங்கியது. ஆனால், அந்த நிலங்களை என்எல்சி நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் வைக்கவில்லை.

இதனால், விவசாயிகள் வழக்கம் போல் நிலங்களில் பயிர் செய்து வந்தனர். தங்களுக்கு வழங்கியுள்ள இழப்பீட்டுத் தொகை மிகக்குறைவானது என்று கூறி போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

கடந்த ஜூலை மாதம், சேத்தியாதோப்பு பகுதியில் என்எல்சி நிர்வாகம் தனது சுரங்கத் தேவைக்காக வாய்க்காலை வெட்டியது. இதற்கு, விவசாயிகள், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் இப்பகுதி விளை நிலங்களுக்குக் கூடுதல் இழப்பீடு என்எல்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

இந்தச் சூழலில், சேத்தியாத் தோப்பு அருகே உள்ள மும்முடிச் சோழகன் கிராமத்தில் என்எல்சி நிறுவனம், தமது இடங்களில் வேலி அமைக்க நிலத்தை சமன் செய்தது. மேலும், தகவல் அறிந்த மும்முடிச் சோழகன் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து, நிலம் சமன் செய்வதைத் தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து தகவலறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகளை என்எல்சி அதிகாரிகள் நிறுத்தினர். பின்னர் வேறு ஒரு பகுதியில் நிலம் சமன் செய்யும் பணியில் என்எல்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் கிராம மக்கள் சென்று, அதை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Tags: nlc protestnlcNLC India Limited
ShareTweetSendShare
Previous Post

விராட் கோலியின் படத்தை வரைந்த மாற்றுத்திறனாளி இரசிகன் !

Next Post

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Related News

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies