என்எல்சி அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய மக்கள் – நெய்வேலியில் பரபரப்பு!
Jun 30, 2025, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

என்எல்சி அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய மக்கள் – நெய்வேலியில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்எல்சி-க்கு சொந்தமான நிலத்தில் வேலி அமைக்கச் சென்ற அந்நிறுவன அதிகாரிகளைக் கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சுரங்க விரிவாக்கப் பணிக்காக சேத்தியாதோப்பு பகுதியில் விளைநிலங்களைக் கையகப்படுத்தியது. அதற்கான இழப்பீடுகளையும் வழங்கியது. ஆனால், அந்த நிலங்களை என்எல்சி நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் வைக்கவில்லை.

இதனால், விவசாயிகள் வழக்கம் போல் நிலங்களில் பயிர் செய்து வந்தனர். தங்களுக்கு வழங்கியுள்ள இழப்பீட்டுத் தொகை மிகக்குறைவானது என்று கூறி போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

கடந்த ஜூலை மாதம், சேத்தியாதோப்பு பகுதியில் என்எல்சி நிர்வாகம் தனது சுரங்கத் தேவைக்காக வாய்க்காலை வெட்டியது. இதற்கு, விவசாயிகள், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் இப்பகுதி விளை நிலங்களுக்குக் கூடுதல் இழப்பீடு என்எல்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

இந்தச் சூழலில், சேத்தியாத் தோப்பு அருகே உள்ள மும்முடிச் சோழகன் கிராமத்தில் என்எல்சி நிறுவனம், தமது இடங்களில் வேலி அமைக்க நிலத்தை சமன் செய்தது. மேலும், தகவல் அறிந்த மும்முடிச் சோழகன் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து, நிலம் சமன் செய்வதைத் தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து தகவலறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகளை என்எல்சி அதிகாரிகள் நிறுத்தினர். பின்னர் வேறு ஒரு பகுதியில் நிலம் சமன் செய்யும் பணியில் என்எல்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் கிராம மக்கள் சென்று, அதை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Tags: nlcNLC India Limitednlc protest
ShareTweetSendShare
Previous Post

விராட் கோலியின் படத்தை வரைந்த மாற்றுத்திறனாளி இரசிகன் !

Next Post

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Related News

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

உயிரிழந்த அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் இருந்தது கண்டுபிடிப்பு!

பழனி அருகே தொடர்ந்து கடத்தப்படும் கனிம வளங்கள் – சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

ரூ.30 கோடிக்கும் மேல் வசூலித்த கண்ணப்பா படம்!

சங்கர நாராயணசாமி கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டு முறையாக பராமரிக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மேலூரில் மாமூல் கேட்டுக் கடை உரிமையாளர்கள் மீது தாக்குதல் : வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்!

கேப்டனாக டி-20யில் அதிக சதங்கள் அடித்து டூ பிளெஸ்ஸிஸ் சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies