விளையாட்டில் இருக்கும் பொருளாதாரம்- இதோ ஆதாரம்!
Sep 9, 2025, 11:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டில் இருக்கும் பொருளாதாரம்- இதோ ஆதாரம்!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 08:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிரிக்கெட் விளையாட்டிற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆனால், இந்தியாவில் கிரிக்கெட் மீது வெறி கொண்ட ரசிகர்களே மிக அதிகம். அந்த அளவு கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அக்டோபர் 5 -ம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இந்தப் போட்டி தொடங்கியது.

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன்ஷிப் பை தேர்வு செய்ய ஐசிசி நடத்தும் இந்த தொடர், இந்திய வரலாற்றில் தற்போதுதான் முதல்முறையாக நடைபெறுகிறது. இதனால்தான் ரசிகர்கள் வெறிகொண்டு கிரிக்கெட் போட்டியை ஆதரித்தும், உற்சாகப்படுத்தியும் வருகின்றனர்.

கடந்த 2011-ம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையிலான அணி வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியது போலவே, தற்போதும் ஒரு அதிசயம் நடக்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.

இந்த நிலையில், உலக கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் உயரும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாங்க் ஆப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ், உலகக் கோப்பை போட்டி, இந்தியாவுக்கு மிகவும் உத்வேகத்தைத் தரும் என்ற நம்புகிறோம். காரணம், 2011-ல் உலக கோப்பை நடைபெற்ற போது, அதனைக் காண 1.2 மில்லியன் பேர் கலந்து கொண்டனர் என ஆய்வுகள் சொல்கிறது.

அதுவும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும் 14-ம் தேதியையொட்டி, முன்னும், பின்னும், சுற்றுலாத்துறை, ஹோட்டல்கள், போக்குவரத்துறை, குறிப்பாக பயணிகள் விமான நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் பெரும் லாபமடையும்.

ஆன் லைன் நிறுவனமான Make my Trip சில தரவுகளை வெளியிட்டுள்ளது. அதாவது, போட்டி நடைபெறும் அகமதாபாத் நகர் மற்றும் தர்மஷாலா ஆகிய நகரங்களுக்கு பயணம் செல்பவர்கள் அதிகரித்துள்ளனர் என்றும், குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தை கணக்கிடும்போது, 150 சதவீதம் ஹோட்டல்கள் ஹவுல்புல்லாகிவிட்டது. விமான நிறுவனங்கள் 80 சதவீதம் தற்போதே புக்கிங் செய்யப்பட்டுவிட்டது.

கடந்த காலங்களில் சினிமா, தீம் பார்க், பெரியபெரிய மால்களில் தங்களது நேரத்தையும், பணத்தையும் செலவிட்டவர்கள், தற்போது கிரிக்கெட் போட்டிக்காக செலவு செய்ய உள்ளனர். இது ஒரு மகிழ்ச்சியான செய்தி என தெரிவித்துள்ளார்.

விளையாட்டை விளையாட்டாக கடந்து போகமுடியவில்லை. காரணம், அதிலும் ஒரு பொருளாதாரம் ஒளிந்து கொண்டுள்ளது என்பது இப்போதுதான் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

Tags: Cricketindian cricket player
ShareTweetSendShare
Previous Post

சிறுமிக்கு பாலியல் தொல்லை: உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது!

Next Post

சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்!

Related News

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies