சிறுமிக்கு பாலியல் தொல்லை: உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது!
Sep 12, 2026, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 08:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த, உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும், அவருடைய காதலரும் முக்கொம்பு கரைப்பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் காவலர்கள் பிரசாந்த், சங்கர் ராஜபாண்டியன், சித்தார்த்தன் ஆகியோர் வந்தனர். அவர்கள் 4 பேரும் சாதாரண உடையில் இருந்தனர்.

இந்த நிலையில் கரைப்பகுதியில் அமர்ந்திருந்த காதல் ஜோடி அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட காவலர்கள், அங்கு சென்று காதல் ஜோடியை மிரட்டி, தனித்தனியாக அழைத்து சென்றுள்ளனர். பிறகு சிறுமியைக் காருக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளனர். மேலும் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, ‘நாங்கள் எப்போது அழைத்தாலும் வர வேண்டும், என்று சிறுமியை மிரட்டி, அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.

இதை அடுத்து காதல் ஜோடிகள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களிடம் நடந்த விவரங்களைத் தெரிவித்தனர். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து உதவி ஆய்வாளர் உட்பட 4 காவலரும் வந்தனர். அவர்கள் காவலர்கள்தான் என்பதைப் புறக்காவல் நிலைய காவலர்கள், அந்த காதல் ஜோடியிடம் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி அங்கிருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து திருச்சி தலைமையக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன் நேரில் சென்று, அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து தனிப்படை துணை ஆய்வாளர் சசிகுமார் மற்றும் காவலர்கள் பிரசாந்த், சித்தார்த்தன், சங்கர் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டார்.

மேலும் சிறுமி அளித்த புகாரின்பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்பட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: police arrestpocso law
Share
Tweet
SendShare
Previous Post

ஹாக்கியில் தங்கம் வென்ற இந்தியா !

Next Post

விளையாட்டில் இருக்கும் பொருளாதாரம்- இதோ ஆதாரம்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies