சிறுமிக்கு பாலியல் தொல்லை: உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது!
Apr 29, 2026, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 08:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த, உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும், அவருடைய காதலரும் முக்கொம்பு கரைப்பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் காவலர்கள் பிரசாந்த், சங்கர் ராஜபாண்டியன், சித்தார்த்தன் ஆகியோர் வந்தனர். அவர்கள் 4 பேரும் சாதாரண உடையில் இருந்தனர்.

இந்த நிலையில் கரைப்பகுதியில் அமர்ந்திருந்த காதல் ஜோடி அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட காவலர்கள், அங்கு சென்று காதல் ஜோடியை மிரட்டி, தனித்தனியாக அழைத்து சென்றுள்ளனர். பிறகு சிறுமியைக் காருக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளனர். மேலும் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, ‘நாங்கள் எப்போது அழைத்தாலும் வர வேண்டும், என்று சிறுமியை மிரட்டி, அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.

இதை அடுத்து காதல் ஜோடிகள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களிடம் நடந்த விவரங்களைத் தெரிவித்தனர். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து உதவி ஆய்வாளர் உட்பட 4 காவலரும் வந்தனர். அவர்கள் காவலர்கள்தான் என்பதைப் புறக்காவல் நிலைய காவலர்கள், அந்த காதல் ஜோடியிடம் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி அங்கிருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து திருச்சி தலைமையக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன் நேரில் சென்று, அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து தனிப்படை துணை ஆய்வாளர் சசிகுமார் மற்றும் காவலர்கள் பிரசாந்த், சித்தார்த்தன், சங்கர் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டார்.

மேலும் சிறுமி அளித்த புகாரின்பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்பட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: police arrestpocso law
ShareTweetSendShare
Previous Post

ஹாக்கியில் தங்கம் வென்ற இந்தியா !

Next Post

விளையாட்டில் இருக்கும் பொருளாதாரம்- இதோ ஆதாரம்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies