சிறுமிக்கு பாலியல் தொல்லை: உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது!
Mar 15, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 08:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த, உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும், அவருடைய காதலரும் முக்கொம்பு கரைப்பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் காவலர்கள் பிரசாந்த், சங்கர் ராஜபாண்டியன், சித்தார்த்தன் ஆகியோர் வந்தனர். அவர்கள் 4 பேரும் சாதாரண உடையில் இருந்தனர்.

இந்த நிலையில் கரைப்பகுதியில் அமர்ந்திருந்த காதல் ஜோடி அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட காவலர்கள், அங்கு சென்று காதல் ஜோடியை மிரட்டி, தனித்தனியாக அழைத்து சென்றுள்ளனர். பிறகு சிறுமியைக் காருக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளனர். மேலும் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, ‘நாங்கள் எப்போது அழைத்தாலும் வர வேண்டும், என்று சிறுமியை மிரட்டி, அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.

இதை அடுத்து காதல் ஜோடிகள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களிடம் நடந்த விவரங்களைத் தெரிவித்தனர். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து உதவி ஆய்வாளர் உட்பட 4 காவலரும் வந்தனர். அவர்கள் காவலர்கள்தான் என்பதைப் புறக்காவல் நிலைய காவலர்கள், அந்த காதல் ஜோடியிடம் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி அங்கிருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து திருச்சி தலைமையக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன் நேரில் சென்று, அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து தனிப்படை துணை ஆய்வாளர் சசிகுமார் மற்றும் காவலர்கள் பிரசாந்த், சித்தார்த்தன், சங்கர் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டார்.

மேலும் சிறுமி அளித்த புகாரின்பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்பட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: police arrestpocso law
ShareTweetSendShare
Previous Post

ஹாக்கியில் தங்கம் வென்ற இந்தியா !

Next Post

விளையாட்டில் இருக்கும் பொருளாதாரம்- இதோ ஆதாரம்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies