நாள்தோறும் 100 சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கிறோம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
Jan 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாள்தோறும் 100 சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கிறோம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 8, 2023, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கிறது. எனினும், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

கேரள மாநிலம் கொச்சியில் சைபர் தாக்குதல் தொடர்பான 2 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை கேரள காவல்துறையும், தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதன் நிறைவு அமர்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துகொண்டு பேசுகையில், “அதிநவீன மென்பொருள் மற்றும் சிப்பைப் பயன்படுத்தும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் சைபர் தாக்குதல்களின் சாத்தியம் அதிகம். இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள ஒரு வலுவான சைபர் செக்யூரிட்டி நெட்வொர்க்கை இந்த அமைப்பு கொண்டுள்ளது.

மென்பொருளைத் தவிர, ராக்கெட்டுகளுக்குள் இருக்கும் ஹார்டுவேர் சிப்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு பல்வேறு சோதனைகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே ஒரு செயற்கைக்கோளைக் கண்காணிக்கும் முறையாக இருந்த மென்பொருள், தற்போது ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் முறைக்கு மாறியிருக்கிறது. இது இத்துறையின் வளர்ச்சியைக் குறிக்கிறது. இதனால்தான், கொரோனா சமயத்தி, தொழில்நுட்பத்தின் வெற்றியைக் காட்டும் தொலைதூர இடத்திலிருந்து விண்ணில் செலுத்த முடிந்தது.

மேலும், இவை தவிர சாமானியர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் செயற்கைக்கோள்களும் உள்ளன. இவை அனைத்தும் பல்வேறு வகையான மென்பொருள்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும் பாதுகாக்க சைபர் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. மேம்பட்ட தொழில்நுட்பம் என்பது ஒரு வரம். அதேசமயம் ஏராளமான அச்சுறுத்தல்களும் இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகளால் ஏற்படும் சவால்களை, அதே தொழில்நுட்பத்துடன் எதிர்கொள்ள முடியும். இதற்கான ஆராய்ச்சியும் கடின உழைப்பும் இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: ISROSomnathCyper security
ShareTweetSendShare
Previous Post

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

Next Post

கணினிமயமாக்கும் கூட்டுறவுத் துறை – அதிரடி காட்டும் மத்திய அரசு!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies