இசை நிகழ்ச்சியில் வெறியாட்டம் போட்ட ஹமாஸ் தீவிரவாதிகள்!
Oct 25, 2025, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இசை நிகழ்ச்சியில் வெறியாட்டம் போட்ட ஹமாஸ் தீவிரவாதிகள்!

250-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள் மீட்பு!

Web Desk by Web Desk
Oct 9, 2023, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் நடந்த இசை நிகழ்ச்சியில் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகள், குழுமியிருந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் உற்சாகமாக நடந்துகொண்டிருந்த இசை நிகழ்ச்சி, கண் இமைக்கும் நேரத்தில் துக்க நிகழ்ச்சியாக மாறிய கொடூரம் அரங்கேறி இருக்கிறது.

இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை காலை திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இஸ்ரேல் நிலைகுலைந்து போயிருந்த நேரத்தில், வான், கடல், தரை மார்க்கமாக அந்நாட்டுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், கண்ணில்பட்ட மக்களை எல்லாம் சுட்டுத்தள்ளி கொன்று குவித்தனர். அன்றையதினம் இஸ்ரேல் நாட்டில் ஜெவிஷ் விடுமுறை தினம் கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜெவிஷ் விடுமுறையை முன்னிட்டு, காஸா-இஸ்ரேல் எல்லையில் உள்ள கிராமப் பகுதியில் இசை விழா நடைபெற்றது. இதில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். தவிர, வெளிநாடுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்களும் பங்கேற்றனர். இஸ்ரேலுக்குள் ஊடுருவிய காஸா தீவிரவாதிகள், திடீரென இந்த இசை நிகழ்ச்சிக்குள் புகுந்து அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் திக்குமுக்காடிப்போன இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். இதனால், அங்கு பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. இசை நிகழ்ச்சி நடந்த அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. பலரும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர். சுமார் 6 மணி நேரம் எவ்வித சத்தமும் போடாமல் தங்களது உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.

எனினும், இத்தாக்குதல் காரணமாக அந்த இடத்தில் ஏராளமான இளைஞர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. சுமார் 250 பேரின் உடல்கள் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக இஸ்ரேல் மீட்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது. எனினும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. மேலும், இவ்விழாவில் கலந்து கொண்டவர்களில் பலரையும் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதியாகவும் பிடித்து சென்றிருக்கிறார்கள். எனவே, விழாவில் கலந்து கொண்டு மாயமானவர்களை கண்டுபிடிக்கும்படி விழா அமைப்பாளர்கள் பாதுகாப்புப் படைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களில் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: attackIsraelHamas TerroristMusic festival250 killed
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து பேட்டிங் !

Next Post

4 நாட்களில் 3 பட்டாசு ஆலை விபத்து – தமிழகத்தில் பகிர் !

Related News

இன்றைய தங்கம் விலை!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறலை பாகிஸ்தான் கைவிட வேண்டும் – ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி வலியுறுத்தல்!

சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

வடகிழக்கு பருவமழை பாதிப்பு – மத்திய குழு இன்று ஆய்வு!

செஞ்சி அருகே தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய நெற்பயிர் – விவசாயிகள் வேதனை!

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மண்டலமாக வலுவடையக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies