இசை நிகழ்ச்சியில் வெறியாட்டம் போட்ட ஹமாஸ் தீவிரவாதிகள்!
Jul 28, 2026, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இசை நிகழ்ச்சியில் வெறியாட்டம் போட்ட ஹமாஸ் தீவிரவாதிகள்!

250-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள் மீட்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 9, 2023, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் நடந்த இசை நிகழ்ச்சியில் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகள், குழுமியிருந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் உற்சாகமாக நடந்துகொண்டிருந்த இசை நிகழ்ச்சி, கண் இமைக்கும் நேரத்தில் துக்க நிகழ்ச்சியாக மாறிய கொடூரம் அரங்கேறி இருக்கிறது.

இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை காலை திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இஸ்ரேல் நிலைகுலைந்து போயிருந்த நேரத்தில், வான், கடல், தரை மார்க்கமாக அந்நாட்டுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், கண்ணில்பட்ட மக்களை எல்லாம் சுட்டுத்தள்ளி கொன்று குவித்தனர். அன்றையதினம் இஸ்ரேல் நாட்டில் ஜெவிஷ் விடுமுறை தினம் கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜெவிஷ் விடுமுறையை முன்னிட்டு, காஸா-இஸ்ரேல் எல்லையில் உள்ள கிராமப் பகுதியில் இசை விழா நடைபெற்றது. இதில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். தவிர, வெளிநாடுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்களும் பங்கேற்றனர். இஸ்ரேலுக்குள் ஊடுருவிய காஸா தீவிரவாதிகள், திடீரென இந்த இசை நிகழ்ச்சிக்குள் புகுந்து அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் திக்குமுக்காடிப்போன இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். இதனால், அங்கு பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. இசை நிகழ்ச்சி நடந்த அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. பலரும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர். சுமார் 6 மணி நேரம் எவ்வித சத்தமும் போடாமல் தங்களது உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.

எனினும், இத்தாக்குதல் காரணமாக அந்த இடத்தில் ஏராளமான இளைஞர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. சுமார் 250 பேரின் உடல்கள் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக இஸ்ரேல் மீட்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது. எனினும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. மேலும், இவ்விழாவில் கலந்து கொண்டவர்களில் பலரையும் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதியாகவும் பிடித்து சென்றிருக்கிறார்கள். எனவே, விழாவில் கலந்து கொண்டு மாயமானவர்களை கண்டுபிடிக்கும்படி விழா அமைப்பாளர்கள் பாதுகாப்புப் படைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களில் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: attackIsraelHamas TerroristMusic festival250 killed
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து பேட்டிங் !

Next Post

4 நாட்களில் 3 பட்டாசு ஆலை விபத்து – தமிழகத்தில் பகிர் !

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies