உத்தரப் பிரதேசம்: முதல் சூரிய சக்தி நகரமாகும் அயோத்தி – பணிகள் தீவிரம்!
Jan 14, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப் பிரதேசம்: முதல் சூரிய சக்தி நகரமாகும் அயோத்தி – பணிகள் தீவிரம்!

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அதற்கு முன்பாக அயோத்தியை முதல் சூரிய சக்தி நகரமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வருகிற ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தி இராமர் கோவில் மூலவரான, குழந்தை இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். மேலும், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 10,000 உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘சூரிய சக்தி ஆற்றல் கொள்கை 2022’ எனும் இலட்சியத் திட்டத்தின் மூலம் நொய்டா மற்றும் 16 நகராட்சிகளைச் சூரிய சக்தி நகரங்களாக உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, சரயு நதிக்கரையில் சூரிய ஆற்றல் பூங்காவை உருவாக்குதல், சூரிய சக்தியில் இயங்கும் படகுகள் வழங்குதல், சூரிய சக்தியால் இயங்கும் தெரு விளக்குகள் அமைத்தல், சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள், பொது இடங்களில் மொபைல் சார்ஜிங் இடங்கள், நகர மின் மயமாக்கல் போன்ற சூரிய சக்தியில் இயங்கும் வசதிகள் உள்ளிட்டவை இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். சூரிய சக்தியைப் பயன்படுத்தி, அரசு கட்டிடங்கள் மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான மின்சாரமும் வழங்கப்பட உள்ளது.

சூரிய சக்தி நகரம், 2023-28 எனும் ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, சூரிய சக்தி தெருவிளக்குகள், அரசு கட்டிடங்களில் சூரிய ஆற்றல் தயாரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், சார்ஜிங் நிலையங்களுடன் கூடிய மின்-ரிக்‌ஷாக்கள், குடிநீர் இயந்திரத்துக்குச் சூரிய சக்தியால் இயங்கும் சுத்திகரிப்பு வசதிகளும் இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்த பணிகள் முதற்கட்டத்திலேயே முடிக்கப்படும் என்றும், அயோத்தியில் நடந்து வரும் பெரும்பாலான திட்டங்கள் ஜனவரிக்குள் முடிக்கப்படும் என்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை இயக்குநா் சுக்லா கூறியுள்ளார்.

அயோத்தியில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வா் யோகி ஆதித்யநாத் நேரடியாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூரிய சக்தி நகரத் திட்டம் மூலம் சரயூ நதிக்கரையில் 40 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றும், 10 மெகாவாட் மின் உற்பத்தி ஜனவரி மாதத்துக்குள் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: Solar Energymai
ShareTweetSendShare
Previous Post

இராமர் கோவிலை சித்தரிக்கும் 3 கிலோ தலைப்பாகை!

Next Post

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து: திடீர் ஒத்திவைப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies