உத்தரப் பிரதேசம்: முதல் சூரிய சக்தி நகரமாகும் அயோத்தி – பணிகள் தீவிரம்!
Jul 26, 2025, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப் பிரதேசம்: முதல் சூரிய சக்தி நகரமாகும் அயோத்தி – பணிகள் தீவிரம்!

Web Desk by Web Desk
Oct 10, 2023, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அதற்கு முன்பாக அயோத்தியை முதல் சூரிய சக்தி நகரமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வருகிற ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தி இராமர் கோவில் மூலவரான, குழந்தை இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். மேலும், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 10,000 உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘சூரிய சக்தி ஆற்றல் கொள்கை 2022’ எனும் இலட்சியத் திட்டத்தின் மூலம் நொய்டா மற்றும் 16 நகராட்சிகளைச் சூரிய சக்தி நகரங்களாக உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, சரயு நதிக்கரையில் சூரிய ஆற்றல் பூங்காவை உருவாக்குதல், சூரிய சக்தியில் இயங்கும் படகுகள் வழங்குதல், சூரிய சக்தியால் இயங்கும் தெரு விளக்குகள் அமைத்தல், சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள், பொது இடங்களில் மொபைல் சார்ஜிங் இடங்கள், நகர மின் மயமாக்கல் போன்ற சூரிய சக்தியில் இயங்கும் வசதிகள் உள்ளிட்டவை இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். சூரிய சக்தியைப் பயன்படுத்தி, அரசு கட்டிடங்கள் மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான மின்சாரமும் வழங்கப்பட உள்ளது.

சூரிய சக்தி நகரம், 2023-28 எனும் ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, சூரிய சக்தி தெருவிளக்குகள், அரசு கட்டிடங்களில் சூரிய ஆற்றல் தயாரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், சார்ஜிங் நிலையங்களுடன் கூடிய மின்-ரிக்‌ஷாக்கள், குடிநீர் இயந்திரத்துக்குச் சூரிய சக்தியால் இயங்கும் சுத்திகரிப்பு வசதிகளும் இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்த பணிகள் முதற்கட்டத்திலேயே முடிக்கப்படும் என்றும், அயோத்தியில் நடந்து வரும் பெரும்பாலான திட்டங்கள் ஜனவரிக்குள் முடிக்கப்படும் என்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை இயக்குநா் சுக்லா கூறியுள்ளார்.

அயோத்தியில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வா் யோகி ஆதித்யநாத் நேரடியாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூரிய சக்தி நகரத் திட்டம் மூலம் சரயூ நதிக்கரையில் 40 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றும், 10 மெகாவாட் மின் உற்பத்தி ஜனவரி மாதத்துக்குள் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: Solar Energymai
ShareTweetSendShare
Previous Post

இராமர் கோவிலை சித்தரிக்கும் 3 கிலோ தலைப்பாகை!

Next Post

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து: திடீர் ஒத்திவைப்பு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies