இந்தியா ஒரு துடிப்பான உயர் கல்வி சூழலைக் கொண்டுள்ளது : தர்மேந்திர பிரதான்!
Oct 26, 2025, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா ஒரு துடிப்பான உயர் கல்வி சூழலைக் கொண்டுள்ளது : தர்மேந்திர பிரதான்!

தான்சானியாவின் முதல் பெண் அதிபரான டாக்டர் சமியா சுலுஹு ஹசனுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது!  

Web Desk by Web Desk
Oct 10, 2023, 08:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா-தான்சானியா இடையே நட்புறவை வளர்ப்பதிலும், பொருளாதார பேச்சுகளை ஊக்குவிப்பதிலும், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகத்தன்மையில் வெற்றியை அடைவதிலும் முக்கிய பங்கு வகித்ததற்காக தான்சானியாவின் முதல் பெண் அதிபரான டாக்டர் சமியா சுலுஹு ஹசனுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர்  தர்மேந்திர பிரதான்; வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர்; கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மேதகு டாக்டர் சமியா சுலுஹு ஹசன், தம்மை “இந்தியக் கல்வியின் தயாரிப்பு” என்று கூறிய அவர்,  இதற்கு ஹைதராபாதில் உள்ள என்.ஐ.ஆர்.டி.யில் தனது ஐ.டி.இ.சி பயிற்சியே காரணம் என்றார். ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் தமக்கு வழங்கிய முதல் விருது என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரம் இது என்று  தெரிவித்தார்.

உலகளாவிய வளரும் நாடுகளின் நோக்கத்திற்கு இந்தியா உண்மையாகவும், விசுவாசமாகவும் உள்ளது. பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை இந்தியா தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது என்பதையும், சந்தையை விட சமூகத்தை மதிப்பதையும் (லாபத்தை விட மக்கள்) அவர் பாராட்டினார். கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

55,000 நிறுவனங்கள், 42 மில்லியன் மாணவர்கள் மற்றும் 1.6 மில்லியன் ஆசிரியர்களுடன் இந்தியா ஒரு துடிப்பான உயர் கல்வி சூழலைக் கொண்டுள்ளது என்பதை மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான் எடுத்துரைத்தார். கல்வி முறைக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜெய்சங்கர், டாக்டர் சமியா சுலுஹு ஹசனுக்கு கல்வி சார்ந்த கௌரவம் வழங்குவது இந்தியாவுடன் அவருக்கு உள்ள நீண்ட கால தொடர்பு மற்றும் நட்பை அங்கீகரிப்பதாகக் குறிப்பிட்டார்.

கல்வியும் திறன் மேம்பாடும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் என்று கூறினார். இந்தியா, தான்சானியா கல்விக்குழுமத் திட்டத்தின் கீழ் 5000-க்கும்  அதிகமான தான்சானியா நாட்டினர், ஏற்கனவே இந்தியக் கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

தான்சானியாவின் சான்சிபார் முதலாவது வெளிநாட்டு ஐ.ஐ.டி.யை அமைக்க விரும்பிய இடமாகும் என்று கூறினார். இந்த நிறுவனம் முழு ஆப்பிரிக்க கண்டத்திற்கும் தொழில்நுட்ப கல்விக்கான முதன்மை மையமாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஜி 20-ல் ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஒரு முழு உறுப்பினராகச் சேர்த்தது இந்திய தலைமைத்துவத்தின் மிக உயர்ந்த வெற்றிகளில் ஒன்றாகும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் கன்வல் சிபல், துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட், தான்சானியாவைச் சேர்ந்த பிரதிநிதிகள், 15 ஆப்பிரிக்க தூதரகங்களின் தலைவர்கள், பிரமுகர்கள், கல்வியாளர்கள், இந்தியாவில் படிக்கும் தான்சானியா மாணவர்கள் மற்றும் அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Tags: central government ministerJaishankar
ShareTweetSendShare
Previous Post

மியான்மரில் வெடிகுண்டு தாக்குதல் 29 பேர் பலி!

Next Post

அமித்ஷாவுடன் தமிழக விவசாய அணி தலைவர் சந்திப்பு!

Related News

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies