பாதுகாப்புத் துறையில் இந்தியா உடன் பிரான்ஸ் ஒப்பந்தம்!
Aug 19, 2025, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்புத் துறையில் இந்தியா உடன் பிரான்ஸ் ஒப்பந்தம்!

Web Desk by Web Desk
Oct 12, 2023, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்பு அமைச்சரும், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரும் பாரீசில் பாதுகாப்பு தொடர்பான 5-ம் ஆண்டு பேச்சுக்களில் ஈடுபட்டனர்; பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்பாக, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர்  செபாஸ்டியன் லெகார்னுவுடன்  பாதுகாப்பு தொடர்பான 5-ம் ஆண்டு பேச்சுக்களில் ஈடுபட்டார்.

பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், பிராந்திய நிலைமையை மதிப்பிடுவது முதல் தற்போது நடைபெற்று வரும் இருநாடுகளின் ராணுவத்திற்கு இடையேயான பேச்சுக்கள் வரை இருவரும் விரிவாக விவாதித்தனர்.

நடைமுறையில் உள்ள பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இரு நாடுகளின் பாதுகாப்புத் தொழில்துறைகளுக்கு இடையோயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவாதித்தனர்.

விண்வெளி, இணையதளம் செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கிய களங்களில் சாத்தியமான ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் விவாதித்தனர். கூட்டத்திற்கு முன்னதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

முன்னதாக, பாரீஸ் அருகே ஜென்னெவில்லியர்ஸில் உள்ள சஃப்ரான் எஞ்சின் பிரிவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைப் பார்வையிட்ட ராஜ்நாத் சிங், விமான – எந்திர  தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்களைப் பார்வையிட்டார்.

இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தும் வகையில் ஃபிரான்சின் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் அவர் சந்தித்தார்.

வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட இந்தியாவில் வளர்ச்சி மற்றும்  உற்பத்தியின் நன்மைகளைத் திரு ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். ஒரு பெரிய, திறன்மிக்க மனிதவளம், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் வலுவான சட்ட கட்டமைப்பு போன்ற இந்திய சந்தையின் உள்ளார்ந்த நன்மைகளை அவர் சுட்டிக்காட்டினார். அக்டோபர் 10, அன்று பாரிஸ் வந்தடைந்த பாதுகாப்பு அமைச்சர்,  அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்.

தமது இரு நாட்டு சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக, ரோம் நகரில் இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோவை, ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார்.

பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ராணுவத் துறையில் கல்வி, கடல்சார் கள விழிப்புணர்வு, பாதுகாப்புத் தகவல்களைப் பகிர்தல் மற்றும் கூட்டு மேம்பாடு, இணை உற்பத்தி மற்றும் கூட்டு முயற்சிகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமது பயணத்தின் ஒரு பகுதியாக ரோம் நகரில் இத்தாலி பாதுகாப்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிற உயர்நிலை தொழில்துறை தலைவர்களையும்  ராஜ்நாத் சிங் சந்தித்தார்.

Tags: Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

பேரணிக்கு அனுமதி தேவை – நீதிமன்றம் சென்ற ஆர்.எஸ்.எஸ். – முழு விவரம்!

Next Post

பாரதத்தை ரிஷிகள் உருவாக்கினார்கள் – டாக்டர் மோகன் பகவத் பேச்சு!

Related News

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies