பாதுகாப்புத் துறையில் இந்தியா உடன் பிரான்ஸ் ஒப்பந்தம்!
Apr 29, 2026, 09:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்புத் துறையில் இந்தியா உடன் பிரான்ஸ் ஒப்பந்தம்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்பு அமைச்சரும், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரும் பாரீசில் பாதுகாப்பு தொடர்பான 5-ம் ஆண்டு பேச்சுக்களில் ஈடுபட்டனர்; பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்பாக, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர்  செபாஸ்டியன் லெகார்னுவுடன்  பாதுகாப்பு தொடர்பான 5-ம் ஆண்டு பேச்சுக்களில் ஈடுபட்டார்.

பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், பிராந்திய நிலைமையை மதிப்பிடுவது முதல் தற்போது நடைபெற்று வரும் இருநாடுகளின் ராணுவத்திற்கு இடையேயான பேச்சுக்கள் வரை இருவரும் விரிவாக விவாதித்தனர்.

நடைமுறையில் உள்ள பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இரு நாடுகளின் பாதுகாப்புத் தொழில்துறைகளுக்கு இடையோயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவாதித்தனர்.

விண்வெளி, இணையதளம் செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கிய களங்களில் சாத்தியமான ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் விவாதித்தனர். கூட்டத்திற்கு முன்னதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

முன்னதாக, பாரீஸ் அருகே ஜென்னெவில்லியர்ஸில் உள்ள சஃப்ரான் எஞ்சின் பிரிவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைப் பார்வையிட்ட ராஜ்நாத் சிங், விமான – எந்திர  தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்களைப் பார்வையிட்டார்.

இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தும் வகையில் ஃபிரான்சின் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் அவர் சந்தித்தார்.

வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட இந்தியாவில் வளர்ச்சி மற்றும்  உற்பத்தியின் நன்மைகளைத் திரு ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். ஒரு பெரிய, திறன்மிக்க மனிதவளம், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் வலுவான சட்ட கட்டமைப்பு போன்ற இந்திய சந்தையின் உள்ளார்ந்த நன்மைகளை அவர் சுட்டிக்காட்டினார். அக்டோபர் 10, அன்று பாரிஸ் வந்தடைந்த பாதுகாப்பு அமைச்சர்,  அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்.

தமது இரு நாட்டு சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக, ரோம் நகரில் இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோவை, ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார்.

பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ராணுவத் துறையில் கல்வி, கடல்சார் கள விழிப்புணர்வு, பாதுகாப்புத் தகவல்களைப் பகிர்தல் மற்றும் கூட்டு மேம்பாடு, இணை உற்பத்தி மற்றும் கூட்டு முயற்சிகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமது பயணத்தின் ஒரு பகுதியாக ரோம் நகரில் இத்தாலி பாதுகாப்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிற உயர்நிலை தொழில்துறை தலைவர்களையும்  ராஜ்நாத் சிங் சந்தித்தார்.

Tags: Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

பேரணிக்கு அனுமதி தேவை – நீதிமன்றம் சென்ற ஆர்.எஸ்.எஸ். – முழு விவரம்!

Next Post

பாரதத்தை ரிஷிகள் உருவாக்கினார்கள் – டாக்டர் மோகன் பகவத் பேச்சு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies