ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி சஸ்பெண்ட்: ஐ.ஓ.சி. அதிரடி!
Jan 14, 2026, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி சஸ்பெண்ட்: ஐ.ஓ.சி. அதிரடி!

உக்ரைன் மீதான போரை கண்டித்து நடவடிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 13, 2023, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதை கண்டித்து, அந்நாட்டின் ஒலிம்பிக் சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் இடைநீக்கம் செய்திருக்கிறது.

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.)  கூட்டம் மும்பையில் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, அவ்வமைப்பின் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில், ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியை இடைநீக்கம் செய்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதன் மூலம், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் சபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களில் உள்ள  விளையாட்டு அமைப்புகளை  ரஷ்யா தங்களுடன் இணைத்துக் கொண்டது. இது நாடுகளின் ஒருமைப்பாடு குறித்த ஒலிம்பிக் சாசனத்தை மீறிய செயல் என்றும், ஆகவே, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ரஷ்ய ஒலிம்பிக் சங்கத்தை இடைநீக்கம் செய்திருப்பதாகவும் ஐ.ஓ.சி. செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஒலிம்பிக் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டிக்கு இனி தேசிய ஒலிம்பிக் கமிட்டியாக செயல்பட உரிமை இல்லை. அதோடு, ஒலிம்பிக் இயக்கத்திடம் இருந்து எந்த நிதியுதவியும் பெற முடியாது. இந்த இடைநீக்க நடவடிக்கையின் காரணமாக, ரஷ்ய வீரர்கள் தங்களது நாட்டு அடையாளத்துடன ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியாது.

அதேசமயம், எந்த நாட்டையும் சேராத நபர்களாக போட்டிகளில் பங்கேற்பதில் எந்த பாதிப்பும் இருக்காது. எனினும், இது இன்னும் மாறக்கூடும். 2024 பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் 2026 மிலானோ கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் ரஷ்ய பாஸ்போர்ட்டுடன் தனி நபர்களாக விளையாட்டு வீரர்கள் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கும் உரிமை ஐ.ஓ.சி.க்கு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. மேலும், ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், சர்வதேச விளையாட்டு அமைப்பான ஒலிம்பிக் கவுன்சிலிலிருந்து ரஷ்ய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Tags: International olympic committeeSuspendsRussian Olympic team
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் மாளிகை நவராத்திரி விழா – பொது மக்களுக்கு வாய்ப்பு!

Next Post

திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies