ஒட்டு மொத்த தென்னை நார் தொழிலையே முடக்கிய திமுக! - அண்ணாமலை குற்றச்சாட்டு.
Jul 25, 2025, 07:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒட்டு மொத்த தென்னை நார் தொழிலையே முடக்கிய திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு.

Web Desk by Web Desk
Oct 13, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசின் இந்த நிலைப்பாட்டால், அன்னிய செலாவணி மற்றும் உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்பு மற்றும் தென்னை நார் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் தொழிலை, திமுக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 10/11/2021 அன்று ஆரஞ்சு வகை பிரிவிற்கு மாற்றி அரசாணை பிறப்பித்திருந்தது. அதோடு மட்டுமல்லாமல், தென்னை நார் தொழில்துறைக்கு மட்டுமின்றி, தொழிலாளர், உற்பத்தியாளர் குடியிருப்பு பகுதிகளுக்கும் மின்சாரத்தைத் துண்டித்தது இந்த மக்கள் விரோத திமுக அரசு.

திமுக அரசின் இந்த நிலைப்பாட்டால், அன்னிய செலாவணி மற்றும் உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்பு மற்றும் தென்னை நார் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மின்கட்டண மானியம் கிடைக்காமலும், அதிகப்படியான மின் கட்டண உயர்வாலும், தென்னை நார் தொழிற்சாலைகள் இயக்கம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.

உற்பத்தியாளர்கள் மற்றும், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியது. திமுகவின் இந்த மக்கள் விரோதச் செயல்பாட்டை, கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி அன்று, தமிஜக பாஜக வெளியிட்ட அறிக்கையில் அம்பலப்படுத்தியிருந்தோம்.

வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் தொழிலை, திமுக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 10/11/2021 அன்று ஆரஞ்சு வகை பிரிவிற்கு மாற்றி அரசாணை பிறப்பித்திருந்தது. அதோடு மட்டுமல்லாமல், தென்னை நார் தொழில்துறைக்கு மட்டுமின்றி, தொழிலாளர், உற்பத்தியாளர் குடியிருப்பு பகுதிகளுக்கும்… pic.twitter.com/jZ5YTEiuTf

— K.Annamalai (@annamalai_k) October 13, 2023

மேலும், தேசிய கயிறு வாரியம், மற்றும் தென்னை நார் தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் சங்கங்கள், இந்த அரசாணைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவுடன், மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது போல் நடித்த திமுக அரசு, தற்போது வேறு வழியின்றி, தென்னை நார் தொழிலை, மீண்டும் வெள்ளை வகைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்காக, ஒரு தொழில் துறையையே சீர்குலைத்து, வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் தொழிலை ஆரஞ்சு வகைக்கு மாற்றி, ஒட்டு மொத்த தென்னை நார் தொழிலையே முடக்கிய திமுக, தற்போது தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியிருப்பது, மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. மீண்டும் இது போல மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று, அறிவாலாயம்
அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: DMKk annamali bjp
ShareTweetSendShare
Previous Post

சந்திரபாபு நாயுடு உயிருக்கு ஆபத்து – மகன் நாரா லோகேஷ், அமித் ஷாவை சந்தித்து புகார்!

Next Post

வீணை இசையின் ஜாம்பவான் சிட்டிபாபுவின் பிறந்தநாள் இன்று !

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies