வந்தே பாரத்தைத் தொடர்ந்து வந்தே சதர்ன் இரயில்!
Jan 14, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத்தைத் தொடர்ந்து வந்தே சதர்ன் இரயில்!

சென்னை ஐ.சி.எஃப்.பில் தயாராகி வருகிறது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 13, 2023, 06:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வந்தே பாரத் இரயிலைத் தொடர்ந்து, ஏ.சி. வசதி இல்லாத சாதாரண பெட்டிகளைக் கொண்ட வந்தே சதர்ன் இரயில்களை நாடு முழுவதும் இயக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உட்பட 22 பெட்டிகளைக் கொண்ட வந்தே சதர்ன் இரயில் பெட்டிகள் சென்னை ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

முழுக்க முழுக்க ஏ.சி. வசதி கொண்ட வந்தே பாரத் அதிவிரைவு இரயில்களை மத்திய அரசு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது வரை 34 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேசமயம், கட்டணம் கொஞ்சம் கூடுதலாக இருப்பதால், சாமானிய மக்களால் பயணிக்க முடியவில்லை. ஆகவே, வந்தே பாரத் இரயில்களுக்கு இணையாக சாமானிய மக்கள் பயணிக்கும் வகையில், ஏ.சி. வசதி இல்லாத வந்தே சதர்ன் இரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

முன்பதிவு இல்லாத 8 பெட்டிகளுடன் மொத்தம் 22 பெட்டகள் இந்த இரயிலில் இடம்பெற்றிருக்கும். இந்த வந்தே சதர்ன் இரயிலின் முதல் இரயிலுக்கான பெட்டிகள் சென்னை ஐ.சி.எஃப். ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் இரயிலில் சில மாற்றங்களை செய்து வந்தே சதர்ன் இரயில் பெட்டிகள் உருவாக்கப்படுகின்றன. பெரம்பூரில் உள்ள கேரேஜ் மற்றும் லோகோ ஒர்க்சில் ஏரோடைனமிக் முகப்பு தோற்றம் கொண்ட 2 இன்ஜின்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதியில் வந்தே சதர்ன் இரயில்கள் இயக்கப்படும் வகையில் தயாரிப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

இந்த வந்தே சதர்ன் இரயிலில் சுமார் 1,800 பயணிகள் பயணிக்க முடியும். இந்த இரயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். ஏ.சி. இல்லாத மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு வந்தே பாரத் இரயிலின் அதே பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வந்தே சதர்ன் இரயில்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அழகான இருக்கைகள், படுக்கை வசதிகளுடன் நவீன விளக்குகளும் பொருத்தப்படுகின்றன. இதன் உட்புறம் தற்போதைய இரயில்களின் பொதுப்பெட்டிகள் போன்றே வடிவமைக்கப்படுகிறது.

அதேசமயம், மின் விசிறிகள், ஸ்விட்சுகள் நவீன வடிவமைப்பை கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு இருக்கையிலும் மொபைல் போன் சார்ஜர் வசதிகள் இருக்கும். மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கழிப்பறையும் இடம்பெறும். இந்த இரயில் வந்தே பாரத் இரயிலுக்கு இணையான வேகத்தில் செல்லும். 2 முனைகளிலும் இன்ஜின்கள் இருக்கும். இது பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும். இந்த இரயில் தயாரிக்கப்படுவதை இரயில்வே அதிகாரிகள் இன்று ஐ.சி.எஃப். ஆலையில் பார்வையிட்டனர்.

Tags: Vande Southern TrainICFChennai
ShareTweetSendShare
Previous Post

சென்னிமலையை காப்பாற்ற பொது மக்கள் போராட்டம்!

Next Post

புதிய விருதுடன் தில்லாக நிற்கும் கில் !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies