சென்னிமலையை காப்பாற்ற பொது மக்கள் போராட்டம்!
Sep 12, 2026, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னிமலையை காப்பாற்ற பொது மக்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 06:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னிமலையில் இன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

கந்த சஷ்டி கவசம் முதல் முறையாக அரங்கேற்றப்பட்ட ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் திருக்கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த நிலையில், சென்னிமலையில் இருந்து அரச்சலூர் செல்லும் சாலையில் கத்தக்கொடி காடு என்ற இடத்தில் ஜான் பீட்டர் வீடு வாங்கி கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். குறிப்பாக, ஜெபக் கூட்டங்கள் நடத்துவதும், ஒலிபெருக்கி மூலம் இந்து தெய்வங்களைச் சாத்தான் என அவமதிப்பது எனக் கடந்த 2 வருடங்களாக இதே வேலையைச் செய்து வந்துள்ளார். இதனைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் அவ்வப்போது காவல் நிலையத்தில் புகார் செய்தும் பலனில்லை.

இந்த நிலையில், மாதம் செப்டம்பர் 17 -ம் தேதி அன்று, வெளியூரிலிருந்து மக்களைத் திரட்டி வந்து ஜெபக்கூடம் நடத்தியுள்ளார். அப்போது, வழக்கம் போல் தனது சேட்டைகளை செய்துள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூட்டம் நடந்த பகுதிக்குச் சென்ற பாஜகவினர் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னிமலையில் மலை மீதுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினர் கூறியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில், கிறிஸ்துவ அமைப்பினர் வலியுறுத்தல் காரணமாகக் கொடுக்கப்பட்ட புகாரின் மீது மட்டும் கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்துக்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனிடையே, சென்னிமலையில் மலை மீதுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரைக் கைது செய்ய வேண்டும் என சென்னிமலையில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். அப்போது, சென்னிமலை முருகனைக் காப்பாற்ற வேண்டி முழக்கமிட்டனர். மேலும், திமுக அரசின் இந்து விரோத செயலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Tags: protestMurugan Temple
Share
Tweet
SendShare
Previous Post

நியூசிலாந்துக்கு 246 ரன்கள் இலக்கு !

Next Post

வந்தே பாரத்தைத் தொடர்ந்து வந்தே சதர்ன் இரயில்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies