நவம்பர் 9-ம் தேதி தென்காசி-காசி தீபாவளி சுற்றுலா இரயில்!
Mar 15, 2026, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவம்பர் 9-ம் தேதி தென்காசி-காசி தீபாவளி சுற்றுலா இரயில்!

முன்பதிவு செய்ய அழைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 14, 2023, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசியில் இருந்து நவம்பர் 9-ம் தேதி புறப்படும் பாரத் கௌரவ் எனப்படும் தீபாவளி சுற்றுலா இரயிலில் காசிக்குச் செல்ல விருப்பமுள்ள பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய இரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. சுற்றுலாப் பயணிகளுக்காக பாரத் கௌரவ் என்கிற பெயரில் சுற்றுலா இரயிலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த இரயில், தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை என்கிற பெயரில் தென்காசியில் இருந்து நவம்பர் 9-ம் தேதி புறப்படுகிறது.

இந்த சுற்றுலா இரயில், தென்காசியில் புறப்பட்டு ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை, காசி, அலகாபாத், கயா வழியாக காசியைச் சென்றடையும். அங்கு, தீபாவளி தினத்தன்று காசியில் உள்ள கங்கை நதியில் புனித நீராடுதலுடன் சுற்றுலா தொடங்குகிறது.

பின்னர், இந்த இரயில், நவம்பர் 16-ம் தேதி இராமேஸ்வரத்தை வந்தயும். தொடர்ந்து, இராமேஸ்வரத்தில் இராமநாதசுவாமி தரிசனத்தோடு சுற்றுலா நிறைவடையும். பிறகு, நவம்பர் 17-ம் தேதி இந்த இரயில் மீண்டும் தென்காசியை சென்றடையும். இந்த இரயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 8 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், ஒரு பேட்டரி கார், 2 பவர் கார்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.

மேலும், சுற்றுலாப் பகுதிகளை பார்வையிட பஸ் போக்குவரத்து, தென்னிந்திய சைவ உணவுகள், சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர், பயண காப்புறுதி, ஏ.சி. மற்றும் ஏ.சி. வசதி இல்லாத தங்கும் இடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து தரப்படும். தவிர, மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஊழியர்கள் பயணித்தால் எல்.டி.சி. சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த சுற்றுலாவுக்கு பயணக் கட்டணமாக படுக்கை வசதிக்கு 16,850 ரூபாயும், மூன்றடுக்கு ஏ.சி. வகுப்புகளுக்கு 30,500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மொத்தமுள்ள 600 இருக்கைகளில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. எனவே, பயணிகள் விரைந்து இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளும்படி, ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டல பொதுமேலாளர் ராஜலிங்கம் பாஸு தெரிவித்திருக்கிறார்.

Tags: Tenkasi-Kasitourist trainBharat Gourav
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் : வரலாறு தொடருமா ?

Next Post

ஆமதாபாத் மைதானத்துக்கு பலத்த பாதுகாப்பு!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies