FIDE உலக ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் 2023 இந்திய வீரர் சாத்வானி முதலிடம் பிடித்து பட்டத்தை வென்றுள்ளார்.
FIDE உலக ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி நேற்று இத்தாலியில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் மகாராஷ்த்ரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த ரௌனாக் சாத்வானி என்ற 17 வயது இளைஞர் பங்குபெற்றார்.
மொத்தம் இந்த போட்டியில் 11 சுற்றுகள் உள்ளது.இதில் 5 சுற்றுகளில் இருந்து மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தார். பின்னர் விளையாடிய போட்டிகளில் ஓரளவு சமநிலை பெற்ற ரௌனாக் புள்ளிகள் பட்டியலில் 4 வது இடத்தை பிடித்தார்.
இதனால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ரௌனாக் 8.5 புள்ளிகளைப் பெற்று அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்து ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார்.
Congratulations to @sadhwani2005 on the remarkable victory at the FIDE World Junior Rapid Chess Championship 2023!
His strategic brilliance and skills have left the world in awe and made the nation proud.
May he keep inspiring the youth of our country with his exceptional… pic.twitter.com/zApwUHvjc3
— Narendra Modi (@narendramodi) October 14, 2023
ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ரௌனாக்கை பாராட்டி பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ” FIDE உலக ஜூனியர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் 2023 இல் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்ற ரௌனாக் சாத்வானிக்கு வாழ்த்துக்கள். அவரது புத்திசாலித்தனமும் திறமையும் உலகையே வியப்பில் ஆழ்த்தி நமது தேசத்தைப் பெருமைப்படுத்தியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார்.