திருச்சியில் வரும் 22-ம் தேதி மாமன்னர் மருது பாண்டியர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. இதில், சிறப்பு அழைப்பாளராக மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொள்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவில் முதன்முதலில் தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கியவர்கள். தமிழ் மண்ணிலிருந்து ஆங்கிலேயரை விரட்டக் கடந்த 1785 -ம் ஆண்டு முதல் 1801 -ம் ஆண்டு வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.
குறிப்பாக, 65 ஆங்கிலேயத் தளபதிகளை வென்ற ஒரே மாமன்னர்கள் எனப் போற்றப்படுகின்றனர். இதனால், விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட மாமன்னர் மருது பாண்டியர்களைப் பாரதம் கொண்டி வருகிறது.
இந்த நிலையில், வரும் 22-ம் தேதி திருச்சியில் மாமன்னர் மருது பாண்டியர்கள் நினைவு நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், திருச்சியில் உள்ள ஒரு பிரபல தனியார் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொள்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.