ஹமாஸ் முக்கிய கமாண்டோ படைத் தளபதி "காலி"!
Jan 14, 2026, 07:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் முக்கிய கமாண்டோ படைத் தளபதி “காலி”!

இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 15, 2023, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், முக்கியப் படைப் பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கமாண்டோ படைகளின் தளபதி ஒருவர், இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி காலையில் காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000 ஏவுகணைகளை செலுத்தியதால் இஸ்ரேல் திக்குமுக்காடிப் போனது. மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வான், கடல், தரை மார்க்கமாக இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், கண்ணில் பட்ட இஸ்ரேலியர்களை எல்லாம் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலை செய்தனர். மேலும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், சிறுவர் சிறுமிகளின் தலையைக் கொய்தும் வெறியாட்டம் போட்டனர். இத்தாக்குதலில் 1,300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. விமானப்படைகளின் மூலம் கொத்துக் கொத்தாக குண்டு மழை பொழிந்து வருகிறது. மேலும், நேற்று முன்தினம் முதல் தரை வழித் தாக்குதலிலும் ஈடுபட்டிருக்கிறது. இத்தாக்குதலில் 1,700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், 200-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது தவிர, காஸா நகரிலுள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகத்தையும் இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசி அழித்தது. அதேபோல, தீவிரவாத அமைப்புத் தலைவரின் வீடு மற்றும் மசூதியின் மையப்பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் முகாம் ஆகியவற்றையும் அழித்தனர்.

மேலும், காஸா பகுதியில் ஹமாஸ் வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் தலைமையகத்தைக் குறிவைத்துத் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், விமானப்படைத் தலைவர் முராத் அபு முராத் கொல்லப்பட்டார். இந்த சூழலில்தான், ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கிய கமாண்டோ பிரிவின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “இஸ்ரேலில் கடந்த 7-ம் தேதி மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் நுக்பா படைப்பிரிவின் தளபதி அலி காடி ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அனைத்து ஹமாஸ் தீவிரவாதிகளும் இதே கதியை சந்திப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் தளபதி அலி காடி, 2005-ம் ஆண்டு இஸ்ரேல் குடிமக்களைக் கடத்தி கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் 2011 கிலாட் ஷாலித் கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக காஸா பகுதிக்கு விடுவிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியிருக்கிறது.

Tags: Hamascommandokilled
ShareTweetSendShare
Previous Post

தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல்: திக்குமுக்காடும் ஹமாஸ் தீவிரவாதிகள்!

Next Post

ஜெய் ஸ்ரீராம் – உதயநிதிக்கு நாராயணன் திருப்பதி கண்டனம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies