தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல்: திக்குமுக்காடும் ஹமாஸ் தீவிரவாதிகள்!
Jun 15, 2026, 01:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல்: திக்குமுக்காடும் ஹமாஸ் தீவிரவாதிகள்!

எல்லையில் அணிவகுத்து நிற்கும் பீரங்கிகள், டாங்கிகள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 15, 2023, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இதுவரை வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், தற்போது தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டிருப்பாதல், சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.

காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது அறிவிக்கப்படாத போரைத் தொடங்கினர். ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணை மற்றும் தரைவழித் தாக்குதலில் 1,300-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, போரை அறிவித்த இஸ்ரேல், விமானப்படை மூலம் காஸா பகுதியில் குண்டுமழை பொழிந்து வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் இருவர் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் 200 பேர் உட்பட 1,700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், இஸ்ரேல் தற்போது தரைவழித் தாக்குதலையும் தொடங்கி இருக்கிறது. இதையடுத்து, இஸ்ரேல்-காஸா எல்லையில் காஸா பகுதியை நோக்கி பீரங்கிகளையும், டாங்கிகளையும் தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான முழு தரை தாக்குதலுக்கும் இஸ்ரேல் தயாராகி இருப்பது தெரிகிறது. காஸா எல்லைக்கு அருகே நிறுத்தப்பட்டிருக்கும் இந்த டாங்கிகள் மூலம் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் காஸா பகுதியை நோக்கி குண்டுகளை வீசுவதைக் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. அதேபோல, வீரர்கள் பீரங்கி குண்டுகளை ஹோவிட்சர்களில் ஏற்றுவதையும் காண முடிகிறது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவத்தின் உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், “காஸா பகுதியில் பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் நடந்து வரும் போரின், அடுத்தகட்ட நகர்வுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை தயாராகி வருகிறது. எனவே, காஸாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் மக்கள் தெற்குப் பகுதிக்கு இடம்பெயருமாறு வலியுறுத்தி இருக்கிறோம். அவ்வாறு வெளியேற விரும்பாதவர்கள் தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள். மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் நாங்கள் பெரும் பலத்துடன் தாக்குவோம்” என்று கூறுயிருக்கிறார்.

மேலும், ஹகாரி கூறுகையில், “எங்களது தாக்குதலால் ஹமாஸ் தீவிரவாதிகள் கடும் அழுத்தத்திலும், அச்சத்திலும் இருக்கிறார்கள். எனவே, பாலஸ்தீனியர்கள் வெளியேறுவதைத் தடுக்கும் முயற்சியில் ஹமாஸ் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். காரணம், தீவிரவாதிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகள் காஸா நகரில் வீடுகளுக்கு அடியில் அமைந்துள்ள சுரங்கப் பாதைகளிலும், பொதுமக்களின் வீடுகளிலும் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவும், பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேல் மக்களை மீட்கவும் காலாட்படை மற்றும் டாங்கிகள் காஸா பகுதிக்குள் நுழைந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் பதிலடியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திக்குமுக்காடி வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags: Israeldeployedtanks
ShareTweetSendShare
Previous Post

ரூ.3 லட்சம் அபராதம் – 5 ஆண்டு சிறை – எதற்குத் தெரியுமா?

Next Post

ஹமாஸ் முக்கிய கமாண்டோ படைத் தளபதி “காலி”!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies