தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல்: திக்குமுக்காடும் ஹமாஸ் தீவிரவாதிகள்!
Jul 31, 2026, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல்: திக்குமுக்காடும் ஹமாஸ் தீவிரவாதிகள்!

எல்லையில் அணிவகுத்து நிற்கும் பீரங்கிகள், டாங்கிகள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 15, 2023, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இதுவரை வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், தற்போது தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டிருப்பாதல், சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.

காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது அறிவிக்கப்படாத போரைத் தொடங்கினர். ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணை மற்றும் தரைவழித் தாக்குதலில் 1,300-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, போரை அறிவித்த இஸ்ரேல், விமானப்படை மூலம் காஸா பகுதியில் குண்டுமழை பொழிந்து வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் இருவர் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் 200 பேர் உட்பட 1,700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், இஸ்ரேல் தற்போது தரைவழித் தாக்குதலையும் தொடங்கி இருக்கிறது. இதையடுத்து, இஸ்ரேல்-காஸா எல்லையில் காஸா பகுதியை நோக்கி பீரங்கிகளையும், டாங்கிகளையும் தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான முழு தரை தாக்குதலுக்கும் இஸ்ரேல் தயாராகி இருப்பது தெரிகிறது. காஸா எல்லைக்கு அருகே நிறுத்தப்பட்டிருக்கும் இந்த டாங்கிகள் மூலம் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் காஸா பகுதியை நோக்கி குண்டுகளை வீசுவதைக் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. அதேபோல, வீரர்கள் பீரங்கி குண்டுகளை ஹோவிட்சர்களில் ஏற்றுவதையும் காண முடிகிறது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவத்தின் உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், “காஸா பகுதியில் பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் நடந்து வரும் போரின், அடுத்தகட்ட நகர்வுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை தயாராகி வருகிறது. எனவே, காஸாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் மக்கள் தெற்குப் பகுதிக்கு இடம்பெயருமாறு வலியுறுத்தி இருக்கிறோம். அவ்வாறு வெளியேற விரும்பாதவர்கள் தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள். மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் நாங்கள் பெரும் பலத்துடன் தாக்குவோம்” என்று கூறுயிருக்கிறார்.

மேலும், ஹகாரி கூறுகையில், “எங்களது தாக்குதலால் ஹமாஸ் தீவிரவாதிகள் கடும் அழுத்தத்திலும், அச்சத்திலும் இருக்கிறார்கள். எனவே, பாலஸ்தீனியர்கள் வெளியேறுவதைத் தடுக்கும் முயற்சியில் ஹமாஸ் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். காரணம், தீவிரவாதிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகள் காஸா நகரில் வீடுகளுக்கு அடியில் அமைந்துள்ள சுரங்கப் பாதைகளிலும், பொதுமக்களின் வீடுகளிலும் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவும், பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேல் மக்களை மீட்கவும் காலாட்படை மற்றும் டாங்கிகள் காஸா பகுதிக்குள் நுழைந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் பதிலடியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திக்குமுக்காடி வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags: Israeldeployedtanks
ShareTweetSendShare
Previous Post

ரூ.3 லட்சம் அபராதம் – 5 ஆண்டு சிறை – எதற்குத் தெரியுமா?

Next Post

ஹமாஸ் முக்கிய கமாண்டோ படைத் தளபதி “காலி”!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies