இந்தியா வியட்நாமுடன் பழமையான உறவுகளைக் கொண்டுள்ளது மற்றும் இரு நாடுகளும் பௌத்தத்தின் பாரம்பரியத்தில் ஆழமான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டுள்ளன என்று மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
வியட்நாமில் உள்ள சர்வதேச நட்பு பூங்காவில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் மார்பளவு சிலையை இந்திய வெளியுறவுத்துறை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பாக் நின்ஹ் மாகாணத்தின் சர்வதேச நற்பெயரையும் இந்தியாவுடனான அதன் வலுவான உறவையும் மேலும் மேம்படுத்தும் என்றார். குருதேவின் படைப்புகள் வியட்நாம் முழுவதும் பரவலாக அறியப்பட்டு, பாராட்டப்பட்டு வியட்நாமிய பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த மார்பளவு நிறுவுவதற்கு ஆதரவை வழங்கிய பாக் நின் மாகாணத்தின் தலைவர்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்தியா வியட்நாமுடன் பழமையான உறவுகளை கொண்டுள்ளது, இரு நாடுகளும் பௌத்தத்தின் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஆழமான வரலாற்று தொடர்பைக் கொண்டுள்ளன எனத் தெரிவித்தார்.
வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஆறு நாள் பயணமாக நேற்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் ஹனோய் சென்றடைந்தார். அவர் வரலாற்று சிறப்புமிக்க டிரான் குவோக் பகோடாவை பார்வையிட்டார்.
டாக்டர் ஜெய்சங்கர் இன்று தனது வியட்நாமிய பிரதிநிதி புய் தான் சோனுடன் பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 18வது இந்தியா-வியட்நாம் கூட்டு ஆணையக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.
தனது விஜயத்தின் இரண்டாவது கட்டமாக, வெளிவிவகார அமைச்சர் சிங்கப்பூர் செல்லவுள்ளார். அவர் சிங்கப்பூர் பிரதமர் மற்றும் நாட்டின் உயர்மட்ட தலைவர்களை சந்திக்கிறார். இந்திய தூதரகத் தலைவர்களின் பிராந்திய மாநாட்டிற்கும் அவர் தலைமை தாங்குவார்.