மைசூர் தசரா விழா கோலாகலத் தொடக்கம்!
Mar 15, 2026, 02:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைசூர் தசரா விழா கோலாகலத் தொடக்கம்!

சுற்றுலாப் பயணிகள் வருகையால் விழாக்கோலம் பூண்ட நகரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 16, 2023, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மைசூரின் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார். இவ்விழாவைக் காண நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

விஜயதசமியை முன்னிட்டு, மைசூரில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது. முதலில் மன்னர்கள் குடும்பத்தினரால் மட்டுமே தசரா விழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், 1980 முதல் அரசு சார்பில் மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை 412 தசரா விழாக்கள் கோலாகலமாக நடந்திருக்கின்றன.

இந்த நிலையில், 413-வது தசரா விழாவுக்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்தது. இதற்காக, தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்ளிட்ட 14 யானைகள் வெவ்வேறு முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்டன. இந்த யானைகளுக்கு தினமும் காலை, மாலையில் நடைப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா மைசூரின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து தொடங்கப்படும். இதற்காக, ஏதாவது ஒரு துறையில் சாதனை படைத்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு தசரா விழாவை தொடங்கி வைக்க பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவருக்கு அரசு சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல, மைசூர் மன்னர் வம்சத்தைச் சேர்ந்த பிரமோதா தேவிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று சுப விருச்சிக லக்கனத்தில் வெள்ளி ரதத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சாமுண்டீஸ்வரி தேவி சிலைக்கு மலர் தூவி பூஜை செய்தும், குத்துவிளக்கேற்றியும் 413-வது தசரா விழாவை இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார்.

மைசூர் தசரா விழா உலகப்புகழ் பெற்றது என்பதால், இத்திருவிழாவைக் காண வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால், மைசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

Tags: MysoreDasara Festival
ShareTweetSendShare
Previous Post

வருமான வரித்துறையினர் சோதனை! 94 கோடி ரொக்கமும், ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளும் பறிமுதல்!

Next Post

தமிழகம்: பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிப்பு!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies