மைசூர் தசரா விழா கோலாகலத் தொடக்கம்!
Aug 15, 2025, 01:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைசூர் தசரா விழா கோலாகலத் தொடக்கம்!

சுற்றுலாப் பயணிகள் வருகையால் விழாக்கோலம் பூண்ட நகரம்!

Web Desk by Web Desk
Oct 16, 2023, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மைசூரின் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார். இவ்விழாவைக் காண நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

விஜயதசமியை முன்னிட்டு, மைசூரில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது. முதலில் மன்னர்கள் குடும்பத்தினரால் மட்டுமே தசரா விழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், 1980 முதல் அரசு சார்பில் மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை 412 தசரா விழாக்கள் கோலாகலமாக நடந்திருக்கின்றன.

இந்த நிலையில், 413-வது தசரா விழாவுக்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்தது. இதற்காக, தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்ளிட்ட 14 யானைகள் வெவ்வேறு முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்டன. இந்த யானைகளுக்கு தினமும் காலை, மாலையில் நடைப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா மைசூரின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து தொடங்கப்படும். இதற்காக, ஏதாவது ஒரு துறையில் சாதனை படைத்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு தசரா விழாவை தொடங்கி வைக்க பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவருக்கு அரசு சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல, மைசூர் மன்னர் வம்சத்தைச் சேர்ந்த பிரமோதா தேவிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று சுப விருச்சிக லக்கனத்தில் வெள்ளி ரதத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சாமுண்டீஸ்வரி தேவி சிலைக்கு மலர் தூவி பூஜை செய்தும், குத்துவிளக்கேற்றியும் 413-வது தசரா விழாவை இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார்.

மைசூர் தசரா விழா உலகப்புகழ் பெற்றது என்பதால், இத்திருவிழாவைக் காண வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால், மைசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

Tags: MysoreDasara Festival
ShareTweetSendShare
Previous Post

வருமான வரித்துறையினர் சோதனை! 94 கோடி ரொக்கமும், ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளும் பறிமுதல்!

Next Post

தமிழகம்: பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிப்பு!

Related News

79-வது சுதந்திர தினம் – தேசிய கொடி ஏற்றிய ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன்!

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

சின்சினாட்டி டென்னிஸ் – கிராச்சேவா, குடெர்மெடோவா காலிறுதிக்கு தகுதி!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies